Pages

Showing posts with label Kalki Weekly Magazine. Show all posts
Showing posts with label Kalki Weekly Magazine. Show all posts

Friday, August 31, 2012

40 சந்திரனே சாட்சி: காமிக்ஸ்–>தொடர்கதை->நாவல்:தமிழில் வாண்டுமாமாவின் புது முயற்சி

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். முதலில் என்னுடைய உடல் நலம் குறித்தான அனைத்து விசாரிப்புகளுக்கும் நன்றி. இப்போதுதான் நாளொன்றுக்கு ஒரு பதிவு இடம் அளவிற்கு தேறி விட்டேனே? அனைவரின் அன்பிற்கும் நன்றி. இதற்காக நான் என்ன செய்து விடப்போகிறேன், வேறு சில (மொக்கையான) பதிவுகளை இடுவதைத் தவிர?

பதிவிற்கு செல்லும்முன் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிடித்த எழுத்தாளர் வாண்டுமாமாவின் இந்த பதிவினை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன். தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லியாகிய வாண்டுமாமா அவர்களைப்பற்றி ஒரு முழுநீள வாழ்க்கை குறிப்பு அடங்கிய பதிவு இடும்வரை அவரைப்பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்தது நம்ம சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளையம் சாரின் இந்த பதிவு மட்டுமே. இந்த பதிவுமேக்கூட நண்பரை தொடர்ந்து இம்சை செய்து இடப்பட்ட ஒன்று என்பது உள்நாட்டு தகவல்.

சென்ற தலைமுறையின் தலை சிறந்த கதை சொல்லியைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையென்றாலும், வரலாற்றின் பக்கங்களில் இவரது பங்கீடு குறித்து தெரிவிக்கப்படவில்லை எனில் அவமானம் தமிழின் தலை சிறந்த கதை சொல்லிக்கு அல்ல,  தமிழுக்கும், வரலாற்றிக்கும் தான்

கல்கி வார இதழில் வந்த சந்திரனே சாட்சி கதைக்கான விளம்பரம்

Ad for Chandirane Satchi

அதனால்தான் அப்போது முதல் இன்று வரை முடிந்தவரை வாண்டுமாமா அவர்களின் புத்தகங்களைப்பற்றியும், தகவல்களையும் இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். நம்மைப்போலவே பல நண்பர்களும் அவரைப்பற்றி எழுதி வருகிறார்கள். Children of all ages என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு எழுத்தாளர் வாண்டுமாமா. அவரை சிறுவர் இலக்கியத்தின் சுஜாதா என்று நான் அடிக்கடி சொல்வேன். இப்படி சொல்வதால் சுஜாதா அவர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மையும் கூட.

ரீ பூட்டிங்: சமீபத்தில் உலக அளவில் இந்த ரீ பூட்டிங் என்கிற விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. தி அமேசிங் ஸ்பைடர்மேன், வரப்போகும் சூப்பர்மேன் போன்றவை அனைத்துமே ரீபூட்டப்பட்ட / படப்போகிற படங்களே. இந்த ரீபூட் பற்றி காமிரேட் லக்கிலூக் என்கிற யுவகிருஷ்ணா என்ன சொல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து படியுங்கள்:

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

தமிழில், காமிக்ஸ் வடிவத்தில் அப்படி ஒரு ரீ பூட் நடந்துள்ளது. அதுவும் முற்றிலும் மாறுபட்ட வடிவில்.அதனைப்பற்றியதே இந்த பதிவு. தமிழில் சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட எழுவாகினும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள Trail-Blazer வாண்டுமாமா அவர்களே இந்த ரீ பூட் விஷயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதோடில்லாமல் வித்தியாசமான ஒரு விஷயமாக பட்டதால் இந்த பதிவில் பின்னணி விவரங்களுடன் அரங்கேறுகிறது. இந்த ரீ பூட் நடந்ததால் திரு வாண்டுமாமா அவர்களின் பத்திரிக்கை வேலைக்கே ஆபத்து வந்ததும், பின்னர் அது பூமாரங் ஆக மாறி அவர் பணிபுரிந்த இதழின் எடிட்டரின் வேலைக்கு வெட்டு வைத்ததும் கிளைக்கதைகள்.

Circa 1962. கல்கி வார இதழில் தொடர்ந்து Sword & Sorcery என்கிற வகையில் வரும் மந்திரஜால,சரித்திரக் கால கதைகளையே சித்திரக்கதை வடிவில் வழங்கி வந்த திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு சமூக நாவலை சித்திரக்கதை வடிவில் வழங்க எண்ணினார். அவரது பல முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டிய கல்கி நிர்வாகமும் இசைந்திட, ஓவியர் வினுவின் கூட்டணியுடன் ஒரு ஃக்ரிஸ்ட்மஸ் ஸ்பெஷல் கல்கி இதழில் ஆரம்பித்ததுதான் இந்த சந்திரனே சாட்சி சித்திரக்கதைத்தொடர்.

 

Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page (ஸ்கான் உபயம் - காமிரேட் ஷிவ் அவர்கள்)
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02

சித்திரக் கதை வடிவில் வெளிவந்த இந்த கதையானது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அப்படி வரவேற்ப்பை பெற்ற இந்த கதை சுமார் இருவது வருடங்கள் கழித்து வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகவும் இருந்தது. கல்கி இதழில் தனது திறமையால் பிரகாசித்த வாண்டுமாமா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோகுலம் என்கிற சிறுவர் பத்திரிக்கையும் ஆரம்பித்தனர். அது ஆறு ஆண்டுகள் சிறப்பாக வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில், 1977ம் ஆண்டு ஜூன் மாதம் பல பிரச்சினைகளால் கல்கி நிறுவனமே பத்திரிக்கைத் தொழிலை நிறுத்தினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய வாண்டுமாமா பின்னர் குங்குமம் இதழில் பணியாற்றிவிட்டு மறுபடியும் கல்கி துவங்கியதும் கோகுலத்தின் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1978ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதியிட்ட இதழுடன் கோகுலம் இதழில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார்.

பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அப்போதுதான் தினமணிக் கதிர் என்கிற  அற்புதமான பத்திரிக்கை வந்துக்கொண்டு இருந்தது. அதில் வாண்டுமாமா அவர்கள் துணை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே அந்த எழுத்தாளருக்கும் இவருக்கும் ஒரு சிறிய வரலாறு உண்டு. இருந்தாலும் சகஜமாக பணிபுரிந்துக்கொண்டு இருந்தார் வாண்டுமாமா. அப்போது மலேசியாவில் வெளிவந்துக்கொண்டு இருந்த தமிழ் நேசன் என்கிற பத்திரிக்கையில் இருந்து வாண்டுமாமா அவர்களிடம் ஒரு தொடர்கதையை கேட்க, அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அப்போது அவர் பணிபுரிந்து கொண்டிருந்த (எக்ஸ்ப்ரெஸ் க்ரூப்) நிறுவனத்தில் ஊழியர்கள் மற்ற பத்திரிக்கைகளில் எழுதக்கூடாது என்பது ஒரு விதியாக இருந்தது.

ஆனாலும் தமிழ் நேசன் நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்த, தன்னுடைய சித்திரத் தொடர்கதையாகிய சந்திரனே சாட்சியை எழுத்துக் கதை வடிவில் தொடர்கதையாக வெளியிட ஒப்புக் கொண்டார் வாண்டுமாமா. டெக்னிகலாக பார்த்தால் இரண்டு விஷயங்களில் வாண்டுமாமா விதிகளை மீறாமல் நடந்துக்கொண்டு இருக்கிறார். ஒன்று:இந்தியாவில் வந்துக்கொண்டிருந்த எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதவில்லை இரண்டு: இது அவர் ஏற்கனவே இருவது வருடங்களுக்கு முன்பாக எழுதியது. அதை ரீ பூட் செய்து வெளியிட்டு இருக்கிறார், அவ்வளவுதான்.

Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi July 1988 Credits Vandumama Chandirane Saatchi July 1988 Title Page
Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi Credits Vandumama Chandirane Saatchi 1st Page

ஆனால் அவர் மீது மிகுந்த கடுப்பில் இருந்த அந்த பத்திரிக்கை ஆசிரியர் தொடர்ந்து இதுபோல பல பிரச்சினைகளை கிளப்பினார். அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நலம் விரும்பியான ஒருவருக்கு வாண்டுமாமா வகித்த துணை ஆசிரியர் பதவியை கைமாற்றவே இத்துனையும். ஆனால் முற்பகல் செய்யின் குறளுக்கேற்ப அந்த பத்திரிக்கை ஆசிரியரையே வேளையில் இருந்து நீக்கியது நிர்வாகம். இப்படியாக வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் ஒரு புயலை வீசிவிட்டே இந்த சாட்சி சென்றது என்றால் அது மிகையல்ல.

இந்த தொடர்கதை தொகுக்கப்பட்டு முழுநீள நாவலாக வானதி பதிப்பக வெளியீட்டில் வந்தபோது (இத்துனை விஷயங்கள் நடந்து இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்) மிகுந்த சிரத்தையுடன் அழகாக வாண்டுமாமா எழுதியுள்ள இந்த முன்னுரையை படியுங்கள்.

 

Vandumama Chandirane Saatchi July 1988 வாண்டுமாமா முன்னுரை Vandumama Chandirane Saatchi Story 1st Page
Vandumama Chandirane Saatchi Foreword Vandumama Chandirane Saatchi Story 1st Page

கதை சுருக்கம்: பிரபல வக்கீல் சேகரை தேடிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார். ஒரு வேலையை அவரிடம் கொடுக்க முன்வரும் அவர் மயங்கி விழுந்து கோமாவிற்கு சென்றுவிடுகிறார். சிறு சிறு கட்டங்களாக, ஒன்றுமே தெளிவில்லாமல், சம்பந்தமில்லாமல் சில குறிப்புகள் மட்டுமே இருக்க, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு Zig-Zag புதிரை அமைதியாக,அலட்டல் இல்லாமல் ஷெர்லக் ஹோல்ம்ஸ்,சங்கர்லால் பாணியில் துப்பறிந்து இடியப்ப சிக்கல்களை தீர்ப்பதே இந்த கதை.

இந்த புத்தகமானது இன்றும் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810

தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின் குறிப்பு - வாண்டுமாமா அவர்களைப்பற்றிய ஏனைய பதிவுகளுக்கான லிங்குகள்:

 

  • வாண்டுமாமா அவர்களின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை -ஒரு சிறப்பு பார்வை-கிங் விஸ்வா-தமிழ் காமிக்ஸ் உலகம்

  • வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை-தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

  • வாண்டுமாமாவின் தேச தேசக் கதைகள் - உலக நாடுகளின் சிறந்த கதை தொகுப்பு

  • ஒற்று உளவு சதி வாண்டுமாமா 190* Not அவுட் வாண்டுமாமாவின் அற்புதமான உளவாளிகளின் குறிப்பேடு

  • வாண்டுமாமா அவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் - பூந்தளிரில் வந்தவை - தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

  • எதிர்நீச்சல்-வாண்டுமாமாவின் வாழ்க்கை வரலாறு-கங்கை புத்தக நிலைய வெளியீடு-தமிழ் காமிக்ஸ் உலகின் சிறப்பு பதிவு

  • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 2

  • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 1

  • வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவர்களின் லேட்டஸ்ட் படம் கொண்ட கிங் விஸ்வாவின் பதிவு

  • வாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை

  • வாண்டுமாமா சித்திரக்கதைகள் 1 -  ரத்தினபுரி ரகசியம் - காமிக்ஸ் பூக்கள் சிறப்பு விமர்சனம்

  • பூந்தளிரின் முதல் இதழ் பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு: காமிக்ஸ் பூக்கள்

  • பூந்தளிரின் முதல் வருட இதழ்களையும், கதைகளை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு

  • வாண்டுமாமா அவர்களை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான ஒரு அறிமுகம்

  • வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதைகளை பற்றிய சிறந்த பதிவு

  • வாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம் பற்றிய பதிவு

  • கனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

  • சி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

  • வாண்டுமாமா அவர்கள் எழுதிய சினிமா விமர்சனம்

  • Thursday, April 21, 2011

    31 வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை-VanduMama’s Kanava?Nijama?

    தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லியாகிய திரு வாண்டுமாமா (என்று பலராலும் அழைக்கப்படும் திரு வி.கிருஷ்ண மூர்த்தி) அவர்களின் பிறந்தநாள் சித்திரை மாதம் ஐந்தாம் நாள் என்று தெள்ளத்தெளிவாக அவரது சுயசரிதையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அவரைப்பற்றிய அதிகாரபூர்வமான தகவல் கையேடு இன்றுதான் அவரது பிறந்த நாள் என்று சொல்கிறது. இருக்கட்டும் - ஐயா, உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் நன்றியுடன்  வணங்குகிறேன். நீங்கள்  வாழும்காலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்படுகிறேன். திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை கலந்த வணக்கங்கள்.

    வாண்டுமாமா (எ) திரு வி.கிருஷ்ணமூர்த்தி தமிழில் பல புனைப்பெயர்களில் எழுதி இருக்கிறார். கௌசிகன் என்ற பெயரே மிகவும் அறியப்படும் மற்றுமொரு பெயராக இருந்தாலும், இந்த மூன்று பெயர்களைத் தவிர (வாண்டுமாமா, கௌசிகன், வி.கிருஷ்ணமூர்த்தி) குறைந்தபட்சம் வேறு ஐந்து பெயர்களிலாவது எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சிறப்பான காரணம் உண்டு. சிறுவர்களுக்கான சித்திரக்கதைகளும், கதைகளும் எழுதும்போது வாண்டுமாமா என்ற பெயரிலும், இளைஞர்களுக்காக எழுதும்போது கௌசிகன் என்ற பெயரிலும் எழுதுவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். உதாரணமாக மூன்று மந்திரவாதிகள், சிலையை தேடி போன்ற சித்திரக்கதைகளை எழுதும்போது வாண்டுமாமா என்ற பெயரிலும், டையல் ஒன் நாட் நாட், அறிவின் விலை ஒரு கோடி போன்ற சித்திரக்கதைகளை எழுதும்போது கௌசிகன் என்ற பெயரிலுமே எழுதி இருப்பார். இன்று வரையிலும்கூட இதனை அறியாதவர்கள் பலர்.

    என்னை சந்திக்க வரும் பல ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான் - தமிழின் மிகச்சிறந்த காமிக்ஸ் கதை எது? கேள்வி என்னவோ மிகவும் சுலபமாக தென்பட்டாலும்கூட பதில் சொல்வது அத்துணை எளிதல்ல. தமிழின் மிகச்சிறந்த சினிமா எது? என்ற கேள்வி போலதான் இந்த கேள்வியும். நேரிடையான தமிழ் காமிக்ஸ் கதைகளா? அல்லது மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளா? இவைதான் சிறந்தது என்பதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? அப்படி அளவுகோல் இருந்தால் அதனை நிர்ணயித்தது யார்? நம்ம மெட்ராஸ் தாதா விமலாதித்த மாமல்லன் போல என்னால் இவை, இவை தான் காரணிகள் என்று கூறும் விருப்பம் இப்போதைக்கு இல்லை. பின்னொரு மழைக்கால மாலைநேர விவாதங்களுக்காக அவற்றை விலக்கி வைத்திருக்கிறேன். இப்போதைக்கு பலராலும் தமிழின் உண்மையான கிளாசிக் என்று பாராட்டப்படும் ஒரு சித்திரக்கதையை பற்றி இந்த பதிவில் விரிவாக விவாதிப்போம்.

    சமீப காலங்களில் ஹாரர் / த்ரில்லர் ஜான்றே ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒரு படவரிசை பைனல் டெஸ்டிநேஷன் பட வரிசை ஆகும். இந்த பட வரிசையின் அடிப்படை கரு ஒன்றுதான்: நடக்கப்போகும் மோசமான நிகழ்வுகளை (விபத்து, கோர மரணம், இத்யாதி, இத்யாதி) முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் கதைநாயகன் அல்லது கதைநாயகி அவற்றை எப்படி தவிர்க்க முயல்கிறார்கள் என்பதே இந்த படங்களின் மையக்கரு. இப்படி முன்கூட்டியே நடக்கபோகும் நிகழ்வுகளை அறியும் திறனுக்கு ப்ரிமோனிஷன் என்று பெயரிட்டு அறிவியலார்கள் அழைப்பார்கள். விஞ்ஞானத்தால் அறிவுபூர்வமாக நிரூபிக்கப்படாத பல விஷயங்களில் இந்த ப்ரிமோனிஷனும் ஒன்று.

    உண்மையிலேயே பேன்டசி கதை ரசிகர்களுக்கு இது போல ஒரு மையக்கரு கிடைத்தால் அதில் பின்னி பெடலெடுப்பார்கள். தமிழில் இதுபோல இலக்கியவியாதிகள் யாராவது எழுதி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை (கண்டிப்பாக தெரிந்து கொள்ள ஆசையுமில்லை). ஆனால் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களின் கதைகளில் ஷெர்லக் கமல்குமார் என்றொரு துப்பறியும் பாத்திரம் வரும் (இவருக்கென்றே பத்திற்கும் மேற்பட்ட கதைகள் எழுதப்பட்டதாக நினைவு). அந்த ஷெர்லக் கமல்குமார் (அறிவியல் அறிஞர்களால் மறுக்கப்படுகின்ற) எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன் என்ற ஒரு வித்தியாசமான ஆறாம் அறிவு கொண்ட ஒரு நபர். இவருக்கு சில விஷயங்கள் கோர்வையாக நினைவலைகள் போல தோன்றும். அதனை கொண்டு பல சிக்கலான கேஸ்களை துப்பறிவார். நான் மாத நாவல்களை படிப்பதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் ஆவதால் இப்போது இந்த வகையான கதைகள் வருகிறதா என்றும் தெரியாது.  ஆனால் அந்த காலகட்டங்களில் படிக்கும் ரசனையை தூண்டிய கதை அமைப்புகளில் இதுவும் ஒன்று.

    தமிழில் வெளிவந்த காமிக்ஸ் கதைகளில் (நேரிடை மற்றும் மொழி மாற்றம்) இதுபோன்ற வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட கதைகளை விரல் விட்டே எண்ணி விடலாம். அவற்றில் தலை சிறந்த ஒரு கதையே வாண்டுமாமா அவர்களின் கனவா? நிஜமா?. இந்த கதை வெளிவந்து சரியாக முப்பத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது. சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979ம் ஆண்டுதான் இந்த கதை துவங்கியது. வாண்டுமாமா அவர்களின் கதையமைப்பில் பல சித்திரக்கதைகள் வந்திருந்தாலும் ஓவியச் சக்கரவர்த்தி திரு செல்லம் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட கதைகள் பதினைந்திற்கும் குறைவே (இந்த இருவரின் அனைத்து படைப்புகளையும் விரைவில் தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் காணலாம்). இந்த இருவரின் திறமையை பற்றி அறியாதவர்களுக்கு இந்த தகவல்: இந்த இருவரின் ஜோடியானது சச்சின்-கங்குலி ஜோடி போல, ஹெயின்ஸ்-கிரீனிட்ஜ் ஜோடி போல ஒரு புகழ்பெற்ற ஜோடி. இருவருமே தங்களது துறைகளில் சமகால அளவில் தலைசிறந்து விளங்கியவர்கள். இப்படி முதன்மையான இந்த இருவரின் ஜோடி ஒன்றாக இணைந்து பணி புரிந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு இந்த கதையே ஒரு சாட்சி.

    கதையை வெகு சுலபமாக சொல்லி விடலாம்: நீலன் என்ற ஒரு ஏழை ஆட்டிடையன் ஒரு நாள் மலையுச்சியில் ஒரு விசித்திர புகையை நுகர்ந்து மயக்கமுறும்போது வித்தியாசமான கனவொன்றை காண்கிறான். தன்னுடைய வீட்டில் வேறொருவன் குடியிருப்பதையும், தற்போதைய மன்னரும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டு, இன்றைய சேனாதிபதி மன்னராகி இருப்பதும், தளபதி ஒருவர் மட்டும் தப்பித்து இவர்களை எதிர்த்து போராடுவதும் அவனுடைய கனவில் வரும் முக்கிய சம்பவங்கள். இவை அனைத்துமே பத்து ஆண்டுகள் கழித்து நடைபெறப்போகும் சம்பவங்கள். மறுபடியும் மயக்கமுறும் நீலன் தன்னுடைய இன்றைய காலகட்டத்தில் திரும்பி இருப்பதை உணர்கிறான். அதாவது நிகழ் காலத்திற்கு.

    Kalki Magazine Dated 31121978 VanduMama' s Kanava Nijama Part1 Introduction

    Kalki Magazine Dated 31121978 VanduMama' s Kanava Nijama Part 1 Page 1

    Kalki Magazine Dated 31121978 VanduMama's Kanava Nijama Part 1 Introduction Kalki Magazine Dated 31121978 VanduMama's Kanava Nijama Part 1 Page 1

    Kalki Magazine Dated 31121978 VanduMama' s Kanava Nijama Part 1 Page 2

    1979 Children's Year NBT

    Kalki Magazine Dated 31121978 VanduMama's Kanava Nijama Part 1 Page 2 1979 Childrens Year NBT

    என்ன செய்வதென்றே தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் நீலன், பின்னர் தெளிவுருகிறான். தன்னுடைய வீட்டருகே தற்போது சிறிய  செடியாக இருப்பதே பத்தாண்டுகள் கழித்து தன்னுடைய கனவில் பெரிய மரமாகி இருப்பதை உணரும் அவன், அந்த செடியை வேரோடு பிடுங்கி விடுகிறான். தன்னுடைய இந்த செயலானது பின்னர் மரமாகப்போகும் அந்த செடியின் எதிர்காலத்தை மாற்றியது போல தன கனவில் கண்ட மற்ற நிகழ்வுகளையும் மாற்ற முடிவெடுக்கிறான். துணிந்து மன்னரிடம் செல்கிறான். ஆனால் அவனது வாதத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாத சூழலில் மன்னர் அவனை மனநலம் தவறியவன் என்றெண்ணி சிறையில் அடைக்க சொல்கிறார்.

    சிறையில் இருக்கும் நீலனை மன்னரின் இளைய சகோதரன் சேனாதிபதியுடன் வந்து சந்தித்திக்கிறார். பத்து வருடங்கள் கழித்து இதே சேனாதிபதிதான் நீலனை காப்பாற்றுவது என்பதால் நீலனுக்கு அவரை தெரிகிறது. சேனாதிபதி அவர்களின் உடலில் இருக்கும் (வெளி ஆட்கள்  யாருக்கும் தெரியாத) அடையாளம் ஒன்றை சொல்லும் நீலன் அவர்கள் இருவரின் நம்பிக்கையை பெறுகிறான். நீலனின் கூற்றில் இம்மியளவும் உண்மை இருந்தால் தங்களின் உயிருக்கு ஆபத்தேற்படுவதோடில்லாமல் நாட்டின் எதிர்காலமே சீர்குலையும் அபாயம் இருப்பதை அவ்விருவரும் உணர்கின்றனர். மன்னரின் சகோதரர் நீலனை கோட்டையின் அகழியில் தள்ளிவிட்டு விட்டு தப்பித்து சென்று இந்த நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்று என்று சொல்வதுடன் முதல் பாகம் முடிவடைகிறது.

    நீலன் என்னவானான்? அவனால் அகழியை உயிருடன் கடக்க முடிந்ததா? தளபதியின் திட்டங்கள் நடந்தேறியதா? மன்னர் கொல்லப்பட்டாரா?  அல்லது நீலன் தன்னுடைய திட்டப்படி இந்த நிகழ்வுகளை நிறுத்தினானா ? எவ்வாறு இது நடக்கும்? ஒரு நாட்டின் எதிர்காலத்தை ஒரே ஒரு தனி நபரால் மாற்ற இயலுமா? என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. விறுவிறுப்பான கதையுடன் உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் கொண்ட இந்த தொடர் கல்கி வார இதழில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது.

    இந்த கதையை படித்து முடித்த பின்பு எனக்கொரு சந்தேகம் எழுந்தது. பின்னர் நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வதே ப்ரிமோனிஷன். ஆனால் இந்த கதையிலும் சரி, பைனல் டெஸ்டிநேஷன் பட வரிசை படங்களிலும் சரி, கதை நாயகர்கள் பின்னர் நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டவுடன் அவற்றை மாற்றி விடுகிறார்கள். சரி, ஒக்கே அதில்என்னப்பா பிரச்சினை? என்றுதானே கேட்கிறீர்கள். அப்படி மாற்றியவுடன் அந்த சம்பவங்கள் எப்படி பின்னர் நடக்கபோபவை ஆகும்? அதாவது நீலன் கனவில் மன்னர் கொல்லப்படுவது என்று ஒரு சம்பவம் பதிவாகிறது. இது ஒரு சம்பவத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது. ஆனால் நீலன் கதையின் முடிவில் தன்னுடைய சமயோசித திறனால் அந்த சம்பவங்கள் நிகழாமல் தவிர்த்து விடுகிறான். அப்படி இருக்க அவனுக்கு வந்தது வெறும் கனவே தவிர பின்னர் நடக்கப்போகும் சம்பவங்கள் அல்ல. லாஜிக் சரிதானே? அந்த தொடரின் வெளியீட்டு விவரங்கள் பின்வருமாறு:

    Episode Details of Kanava? Nijama? in Kalki – Year 1979 – 1st Print of the Story – Got Reprinted twice later on

    Kanava Nijama 1st Print

    இந்த அட்டவணையில் இருக்கும் தேதிகள் அனைத்துமே கைவரப்பெற்ற தகவல்களே. என்னிடம் இந்த தொடர்கதை இருந்தாலும் முழு புத்தகமாக (முழு இதழ் கல்கியும்) இல்லை. வெறும் இந்த தொடர்கதை மட்டுமே முழுமையாக இருக்கின்றது. ஆகையால் இந்த தேதிகள் அனைத்தும் வேறு தகவல்களை மைய்யமாக கொண்டு சேகரிக்கப்பட்டவை. சிறிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புண்டு.

    கல்கியில் / கோகுலத்தில் வெளியான வாண்டுமாமா அவர்களின் பல தொடர்கள் பின்னாளில் புத்தகமாக ஒரே தொகுப்பில் வெளியிடப்பட்டன. அனைவருக்கும் தெரிந்த ஒரு வெளியீடு பார்வதி சித்திரக்கதைகள் ஆகும். ஆனால் பார்வதி சித்திரக்கதைகள் வெளிவருவதற்கு எட்டு ஆண்டுகள் முன்பே (1985) இவை தொகுக்கப்பட்டு ஒரு தனி இதழில் காமிக்ஸ் கதையாக வெளியானது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும். சென்னையில் இருந்து வெளியான செந்தூர் பதிப்பகத்தார்தான் முதன்முதலில் வாண்டுமாமா அவர்களின் சித்திர தொடர்கதைகளை தொகுத்து ஒரே வெளியீடாக பதிப்பித்தனர். பின்னரே பார்வதி சித்திரக்கதைகள் தொடரில் இது வெளிவந்தது. இதோ அந்த இதழ்களின் அட்டைப்படங்கள் (கனவா நிஜமா என்ற தொடர்கதை தான் மாயாபுரி என்ற பெயரில் வெளியானது). முதல் அட்டைப்படத்தை வரைந்தவர் ஓவியச்சக்கரவர்த்தி திரு செல்லம் (எ) செல்லப்பன் அவர்கள். இரண்டாவது படத்தை வரைந்தவர் நம் மனங்கவர் ஓவியர் திரு அரஸ் அவர்கள்.

    Chendhur Comics Issue No 1 Dated 1st Feb 1985 Kanava? Nijama? Front Cover

    Parvathi Chithirak Kadhaigal PCK No 15 Dated Aug 1993-VanduMama Kanava Nijama Cover

    Chendhur Comics Issue No 1 Dated 1st Feb 1985 Front Cover Parvathi Chithirak Kadhaigal PCK No 15 Dated Aug 1993 VanduMama Kanava Nijama Cover

    கல்கி இதழில் பெரிய அளவில் வெளியான அதே படங்களை பார்வதி சித்திரக்கதை தொடரில் சிறிய அளவில் வெளியிட்டனர். அளவு மாறியபோது வேறு சில மாற்றங்களும் நடந்தேறின. முன்னுரையில் இரண்டு வரிகள் எடிட் செய்யப்படுகின்றன. படங்களில் அந்த கூர்மை (Sharpness) குறைகிறது. அதே சமயம் விலையை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டி பார்வதி சித்திரக்கதைகள் உயர்தர அச்சுத்தாளில் இல்லாமல் சாதரணமான தாளிலேயே அச்சிடப்பட்டது. அதனால் படங்களில் அந்த தெளிவு குறைந்து இருந்தது.

    Parvathi Chithirak kadhai PCK No 15 Dated Aug 1993 Kanava? Nijama? Intro VanduMama Story Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Kanava Nijama VanduMama Story Page 01 Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Kanava Nijama VanduMama Story Page 02
    Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Intro for Kanava Nijama VanduMama Story Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Kanava Nijama VanduMama Story Page 01 Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Kanava Nijama VanduMama Story Page 02

    இந்த கதையில் இருந்துதான் செல்லம் அவர்கள் ஸ்டிப்ளிங்  என்கிற ஒரு தனி ஷேடிங் (புள்ளிகளை மட்டுமே கொண்டு நிழலூட்டும் பாணி) முறையை ஆரம்பித்து இருப்பார். இதற்க்கு முன்னரும்கூட அவரின் படங்களில் இந்த ஸ்டிப்ளிங் பாணியை உபயோகித்து இருந்தாலும் முதன்முறையாக முழு கதையிலும் இந்த ஸ்டிப்ளிங் ஷேடிங் முறை திறமையாக உபயோகப்படுத்தப்பட்டு இருப்பது இந்த கதையில் இருந்தே. முழு வண்ணங்களில் வரைவதில் பல ‘பிளஸ்’கள் இருந்தாலும் தமிழ் வார இதழ்களுக்கு முழு வண்ணத்தில் காமிக்ஸ் பக்கங்களை வெளியிடுவது மிகவும் குறைவே. ஆகையால் பெரும்பான்மையான சித்திரக்கதை தொடர்கள் கருப்பு வெள்ளையிலேயே இருக்கும். அந்த கருப்பு வெள்ளையிலேயே இந்த ஸ்டிப்ளிங் ஷேடிங் முறையை உபயோகப்படுத்தி வித்தியாசத்தை காட்டி இருப்பார் செல்லம் அவர்கள். கைரோஸ்கியூரோ என்ற ஒரு சித்திர வழக்கத்தைபோலவே செல்லம் அவர்களும் இந்த ஸ்டிப்ளிங் ஷேடிங் முறையை அற்புதமாக உபயோகப்படுத்தி இருப்பார்கள். தமிழில் எழுபதுகளில் பொன்னி காமிக்ஸில் வி.சந்திரன் என்ற ஓவியர் ஹாட்சிங் மற்றும் க்ராஸ் ஹாட்சிங் ஷேடிங் முறையை மிகவும் திறம்பட உபயோகப் படுத்தி இருப்பார். அவருக்கு பிறகு தமிழில் செல்லம் அவர்களே இந்த யுத்தியை முறையாக கருப்பு வெள்ளை சித்திரங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

    தமிழில் க்ராஸ் ஹாட்சிங் ஓவிய பாணியை பிரதானமாக கொண்டு வந்த கதைகளில் சிறப்பானது முத்து காமிக்ஸில் வெளிவந்த மஞ்சள் பூ மர்மம் மற்றும் தலை கேட்ட தங்க புதையல் ஆகிய இரண்டு கதைகளே. இந்த இரண்டு கதைகளுக்கும் ஓவியம் வரைந்தவர் பாவ்லோ மொன்டெக்கி என்ற ஓவியர் ஆவார். ஒரு சாம்பிளுக்கு இந்த படங்களை பாருங்கள். வெறும் கோடுகளை மட்டுமே இந்த அளவுக்கு நேர்த்தியாக உபயோகப்படுத்த முடியுமா என்று வியக்க வைத்திருப்பார்.

    தமிழில் வெளிவரும்/வெளிவந்த/வெளிவரப்போகிற காமிக்ஸ் கதைகளில் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை அச்சிடப்படும் தாளின் தரமும், அச்சு முறையும். உதாரணமாக இந்த இரண்டு படங்களை பாருங்கள். முதல் படமானது சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்கி இதழில் வெளிவந்த ஒரிஜினல் படம். இந்த படம் வெளிவந்த தாளின் தரமும் நன்றாகவே இருந்தது. ஆகையால் படத்தில் ஸ்டிப்ளிங் ஷேடிங் முறை திறமையாக வெளிப்படுகிறது. ஆனால் இரண்டாவதாக இருக்கும் படத்தில் அந்த அளவிற்கு தெளிவாக தெரியவில்லை. காரணங்கள் பல. முதல் காரணம் ரீப்ரின்ட் செய்யப்படுவதற்கு அந்த ஒரிஜினல் நல்ல முறையில் பேணி, பாதுகாக்கப்பட்டு இருத்தல் அவசியம். ஒரிஜினல் இருந்தாதானே டுப்ளிகேட் செய்ய இயலும்? இங்கு ஒரிஜினல் நல்ல முறையில் உபயோகப்படுத்தப்படவில்லை. இரண்டாவது காரணம் அச்சிடப்படும் தாளின் தரம். நல்ல உயர்தர வெள்ளைத் தாளில் அச்சிடப்படும் படங்கள் சிறப்பாக தெளிவாக இருக்கும். தரம் குறைந்த தாளில் வெறும் படங்கள் இப்படித்தான் சற்று குறைந்த தரத்தில் வெளிவரும். மூன்றாவது அசச்சு தரம். இதைப்பற்றி பின்பொரு பதிவில் விரிவாக அலசுவோம்.

    Kalki Magazine Dated 31121978 VanduMama's Kanava Nijama Part 1 Page 1 Stippling Sample – Original 1st Time Print – Hence Stippling is Visible

    Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Kanava Nijama VanduMama Story Page 01 Stippling Sample – 3rd Reprint in Poor Quality Paper – Stippling Not Visible
    Kalki Magazine Dated 31121978 VanduMama's Kanava Nijama Part 1 Page 1 Stippling Sample Parvathi Chithirak kadhai No 15 Dated Aug 1993 Kanava Nijama VanduMama Story Page 01 Stippling Sample

    பதிப்பகத்தாருக்கு ஒரு வேண்டுகோள்: வாண்டுமாமா அவர்களின் சிதிரக்கதைகளை மறுபதிப்பு செய்ய தரமான ஒரிஜினல் புத்தகங்கள் வேண்டுமெனில் தமிழ் காமிக்ஸ் உலகை அணுகவும். கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் (சித்திரக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள், புத்தக வெளியீடுகள்) நல்ல கண்டிஷனில் இருக்கின்றன. ஆகையால் அடுத்து வரப்போகும் பதிப்புகளாவது நல்ல தரத்தில் இருக்கட்டும்.

    இத்துடன் இந்த பதிவினை முடித்துக்கொண்டு விடை பெறுவோம். நெடுநாட்களாக காமிக்ஸ் நியூஸ் பதிவுகளையே காணோமே என்று பலரும் வினவி வருகின்றனர். ஆகையால் வரும் திங்கள் அன்று அடுத்த பதிவானது காமிக் கட்ஸ் தான். உங்களது கருத்துகளையும், வாண்டுமாமா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் மறவாமல் தெரிவியுங்கள்.

    தொடர்புடைய சார் பதிவுகள்: Suggested Reading

    Saturday, February 05, 2011

    18 Comic Cuts 27-News 27: Comics News from the latest issues of Kumudam, Puthiya Thalaimurai & Anandha Vikatan

    Dear ComiRades,

    Welcome Back. This is the 1st post in the month of Feb 2011 and hopefully many more to follow. Now, then: TCU is getting many a personal mails and SMS’s on posting too many Comic Cuts/News Posts. However, when there are News items to be made aware, it becomes our duty not to ignore them. Anything and everything related with Tamil comics will be recorded over here and this trend will continue in the near future as well and also in the times to come. Hence, let us get into another on of our customary News Posts: Comic Cuts 27.

    We all know that the Editor of Tamil weekly magazine Kumudam (Official website: http://www.kumudam.com/) is a ComiRade and he has already read the Lion Comics Issue No 208 – XIII Ratha Padalam Jumbo Special issue. He even wrote about this in his celebrated Q & A Section last week and that was blogged in TCU over HERE. After that particular book was on stands, many a ComiRade felt very happy and they thought this is the ultimate honour for the issue. To follow up that, this week’s Kumudam has carried a letter in response to that XIII Jumbo special write up in Arasu padhilgal. One Mr M.G.Bharath from Dindukkal (Tamil Nadu) has written a letter to the editor of kumudam that he also wants to read that comics. Such is the writing style of Arasu that a non-comic reader is also tempted to read it.

    Kumudam Dated 02022011 Page 132 Arasu Padhilgal -  Lion Comics Issue No 208 – Issue Dated Nov 2010 – XIII Rathap Padalam Jumbo Special – Arasu

    Kumudam Dated 02022011 Page 132 Arasu Padhilgam Lion Comics Jumbo Spl Intro

    Kumudam Dated 09022011 Letters to the Editor Page No 139 Reader Wanting Lion Comics Issue No 208 – XIII Rathap Padalam - Jumbo Special – Request Letter
    Kumudam Dated 09022011 Letters to the Editor Page No 139 Reader Wanting Lion Comics Jumbo Spl Letter

    Apart from that, This weeks Anandha Vikatan weekly (official website: http://new.vikatan.com/) also had a interesting news which may enthuse the long time comic readers. Yes, in one of it’s star reply (Director Bala) section, one person has asked about the favourite author. For that question, The controversial director says that he loves the long running daily strip of Kanni Theevu from the Daily News paper Thina Thanthi & as he does not know the author, he cannot say who his favourite author is. ComiRades may recall that Mr Ayyampalayam Venkateswaran has already blogged about this daily strip in his wonderful blog. Here is the link: Comics Pookkal

    Here is the scan:

    Tamil Weekly Anandha Vikatan – Latest Issue Dated 09022011 - Director Bala Answers About Daily Strip Kanni Theevu – India’s Longest Running Comics Strip
    Anandha Vikatan Dated 09022011 Director Bala Answers About Daily Strip

    The weekly magazine Puthiya Thalaimurai has already showed it’s penchant for Comics by articles and book reviews. Here is one more to add to that list. Mr M.P.Udhaya Suriyan (Thala to us) has reviewed this cartoon book on one of the famous leaders of Tamil Nadu – Arignar Anna. This book contains all the caricatures and cartoons drawn over the life time of the leader & is a must buy for the party men.

    Puthiya Thalaimurai weekly magazine – Latest Issue Dated 10022011 – Book review By M.P.Udaya Suriyan - Cartoonayinam Book Review Page 54 & 55
    Puthiya Thalaimurai Issue Dated 10022011 Cartoonayinam Book Review Page 54 & 55

    We all know that the annual Chennai Book fair happens in the 1st week of the year in Chennai. Likewise, there is a Art Fair happening in the neighbourhood state of Bangaluru every year for the last 8 years. Anandha Vikatan magazine has covered this year’s fair with it’s youth artist Shyam taking through the fair with his own vision. Here are the scans of the same and enjoy the detailed work. Maybe next year TCU will plan for a visit there.

    Tamil Weekly Anandha Vikatan – Latest issue Dated 09022011 – Artist Shyaam Reviews about the 08th Annual Bangaluru Drawing Fair 2011 – 3 Page Article
    Anandha Vikatan Dated 09022011 Bangaluru Drawing Fair 2011 Page 1
    Anandha Vikatan Dated 09022011 Bangaluru Drawing Fair 2011 Page 2
    Anandha Vikatan Dated 09022011 Bangaluru Drawing Fair 2011 Page 3 Final

    Old News 01:  From this Comic Cuts onwards, TCU will try to bring on some of the old news related to Comics and artists of Tamil Comics Ulagam. Here is one such news. Though not much old, this news was not posted earlier as TCU was not doing much of the news posts at that time. This news is self explanatory. Here is that:

    Kalki Weekly Magazine - Issue Dated 15082010 - Gift to Artist jeyaraj by other Artists – Art by Maruthi, Maniyam Selvam & Aras
    Kalki Magazine Issue Dated 15082010 Gift to Artist jeyaraj

    Old News 02: This is another news about the enquiry about Tamil and Indian comics. This news appeared in India Today magazine some 6 years ago and was available online. Hence this news is here.

    India Today Issue Dated 09th Nov 2005 Pondicherry Conference & Professor Umberto Eco – Enquiry on Tamil Comics

    India Today Issue Dated 09th Nov 2005 Pondychery Conference & Professor Eco

    Now,then; The next post will on the year end review post for the year ended 2010. Most probably that will be done by Monday and from this month onwards, ComiRades will see a radical change in the number of posts in TCU.

    Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

    Thanks & Regards,

    King Viswa.

    Related Posts with Thumbnails