Pages

Showing posts with label Kumudam Tamil Weekly. Show all posts
Showing posts with label Kumudam Tamil Weekly. Show all posts

Thursday, February 19, 2015

5 Comic Cuts 62: R K Laxman Tribute – Part 5 (Kumudam Tamil Weekly)

Dear ComiRades,

Welcome back to the final post in the tribute series of One of India’s most talented cartoonists – R.K.Laxman, who left us on 26th Jan 2015. To make sure that these tributes, which were published in various media, are available in one place for future reference, TCU is aggregating them under this tribute series.

As mentioned sometime back, some of the legends of the Tamil comics Blogosphere are making a comeback and here is one of them: Greatest Ever Comics otherwise known as GEC.

GEC’s post on Comics Shop in Chennai

Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 23 For those who came in late, this is the fifth and final part of this tribute series. Here are the previous ones:

Dr 7’s Tribute Post on R.K.Laxman

TCU’s R.K.Laxman Tribute Post – Part 1 (The Hindu Tamil)

TCU'S R.K.Laxman Tribute Post – Part 2 (Cartoonist Madhan in Jannal Magazine)

TCU’s R.K.Laxman Tribute Post – Part 3 (Aanandha Vikatan Tamil Weekly)

TCU’s R.K.Laxman Tribute Post – Part 4 (Kungumam Tamil Weekly)

Moving on, here is the wonderful tribute paid by Kumudam Weekly Magazine in their issue dated 09th February 2015, On stand date of which was 01st Feb 2015.

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Arasu Pathilgal Tribute to RKL Page No 135 only
Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Arasu Pathilgal Tribute to RKL Page No 135 only

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 146

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 146

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 147

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 147

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 148

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 148

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 149

Kumudam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stands 01022015 Tribute to RKL Page No 149

From tomorrow onwards, we shall have the monthly comics introductory posts. More over, we shall have some wonderful news on Tamil comics blogging. Well, that’s all for this post and  As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Tuesday, December 25, 2012

22 Comic Cuts 48-News 48: குமுதம் அரசு பதில்களில் காமிக்ஸ், ஆனந்தவிகடன் லூசுப்பையன் பகுதியில் இரும்புக்கை மாயாவி, வேலையை விட்டுவிட்டு ப்ளாக்கராக மாறிய சூப்பர்மேன்

டியர் காமிரேட்ஸ்,

வெல்கம் பேக். நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு பதிவிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, சென்ற பதிவிற்கு பிரம்மாதமான வரவேற்ப்பு.ஒருவேளை நடுவில் ஒரு நான்கு மாதங்கள் பதிவுலகம் பக்கம் வராமல் இருந்ததால் அதற்க்கான ஆதரவுதான் இது என்று நண்பர் இரவுக்கழுகு தெரிவித்தார். அப்படியும் இருக்குமோ என்று வியந்தவாறு இன்று காலை குமுதம் இதழை படித்தபோது அரசு பதில்களில் நம்முடைய காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழில் வெளிவந்த காற்றில் கரைந்த கப்பல்கள் பற்றிய பதிலை படித்தவுடன் ரொம்ப நாட்களாக நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளை இடாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. உடனடியாக கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த முக்கியமான காமிக் கட்ஸ்'களின் தொகுப்பை இங்கே இந்த பதிவில் வழங்கலாமென்று முடிவெடுத்ததின் விளைவே இந்த பதிவு.

குமுதம் அரசு பதில்கள்: தமிழில் அதிகமாக படிக்கப்படும் வார இதழாகிய குமுதத்தில் மக்கள் விரும்பி படிப்பது / முதலில் படிப்பது அரசு பதில்கள் பகுதியே. நம்முடைய லயன் முத்து காமிக்ஸ் இதழ்களில் எப்படி ஹாட் லைன் / காமிக்ஸ் டைமை நாம் முதலில் படிப்பது போல குமுதத்தில் பெரும்பான்மையினரால் முதலில் படிக்கப்படுவது அரசு பதில்களே.

ஆரம்பத்தில் அரசு என்பது யார்? என்றே ஒரு விவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. ஆனால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்போதைய "அரசு" எனக்கு மிகவும் பரிச்சையமானவ்ர். நம்முடைய லயன் முத்து காமிக்ஸ் இதழ்கள் மீது தீராக் காதல் கொண்டவர். சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது நம்முடைய காமிக்ஸ் ஸ்டாலுக்கு வந்து நம்முடைய கம்பேக் ஸ்பெஷல் மற்றும் ஃபுல் செட் ஒன்றினையும் வாங்கிக்கொண்டு சென்றவர் என்பது குறிப்பிட தக்கது.

இந்த அரசு பதில்கள் பகுதியில் நமது காமிக்ஸ் பற்றி மிகவும் பெருமையாக எழுதப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி அரசு, நன்றி குமுதம், நன்றி அதன் எடிட்டர் அவர்களுக்கு.

 

Kumudam Tamil Weekly Magazine Dated 02012013 On Stand 25122012 Arasu Padhilgal  Page No 34 35
Kumudam Tamil Weekly Magazine Dated 02012013 On Stand 25122012 Arasu Padhilgal  Page No 34 35

ஆனந்த விகடன் லூசுப்பையன்: கடந்த பல வருடங்களாக விகடனின் முகவரியாக மாறிவிட்ட நமது லூசுப் பையன் பகுதியில் நமது முத்து காமிக்ஸின் முகவரி (சொல்லப் போனால் தமிழ் காமிக்ஸின் முகவரி?!?) ஆக இருக்கும் (இருந்த?) இரும்புக் கை மாயாவி அவர்களை பற்றி கிண்டலடிக்கும் வகையில் சொல்லப் பட்டு இருந்தது.

பிரபலமான ஒரு பகுதியில் நம்மை பற்றி பேசுகிறார்கள் என்றாலே அது நம்முடைய புகழை பற்றித்தான் சொல்லும். அந்த வகையில் நன்றி லூசுப் பையன், நன்றி ஓவியர் கண்ணா, நன்றி எடிட்டர் of ஆனந்த விகடன்.

Anandha Vikatan Tamil Weekly Issue Dated 26092012 Loosup Paiyan Gig Page No 110 Lion Muthu Comics Mention Panel
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 26092012 Loosup Paiyan Gig Page No 110 Lion Muthu Comics Mention Panel

சித்திர பெரிய புராணம்: ஓவியர் - நூலாசிரியர் ராஜம் அவர்களை நம்முடைய தொடர் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்றாக பரிச்சயம் உண்டு. அவரது லேட்டஸ்ட் படைப்பை பற்றி தினமலர் நாளிதழின் விமர்சன அறிமுகப் பகுதி இங்கே உங்களின் பார்வைக்கு. வாங்கிப் படியுங்கள், மோசமில்லை.

DinaMalar Tamil Daily Page No 10 Dated Sunday 28th Oct 2012  Chithira Periya Puraanam
DinaMalar Tamil Daily Page No 10 Dated Sunday 28th Oct 2012  Chithira Periya Puraanam

M.S.சுப்புலஷ்மி அவர்களைப்பற்றிய காமிக்ஸ்: சென்ற ஆண்டு ஜூன் மாதம் லக்ஷ்மி தேவநாத் அவர்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய ஒரு கிராஃபிக் நாவலை வெளியிட்டார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வெளியீடு அது. எந்த அளவிற்கு அதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது எனில் டெக்கன் குரோனிக்கல் நாளிதழின் சென்னை எடிட்டரே அதனைப்பற்றி நேரிடையாக ஒரு விமர்சனம் எழுதி இருந்தார். அதுமட்டுமில்லாமல், தி ஹிந்து,ஆனந்த விகடன், டைம்ஸ் ஆப் இந்திய என்று பல மீடியா வெளிச்சங்கள் இந்த புத்தகத்தின் மீது விழுந்தது. ஒக்கே, ஒக்கே, தமிழ் காமிக்ஸ் உலகிலும் ஒரு சிறப்பு பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.

இப்போது,அமர் சித்ரா கதா நிறுவனம் மூலம் M.S.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய ஒரு கிராஃபிக் நாவல் வெளியிடப் பட்டுள்ளது. அதனைப்பற்றி வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு இங்கே:

Deccan Chronicle Chennai Chronicle Page No 02 Dated 10th Dec 2012 Sunday ACK Comics on MS Subbulakshmi
Deccan Chronicle Chennai Chronicle Page No 02 Dated 10th Dec 2012 Sunday ACK Comics on MS Subbulakshmi
Indian Express Chennai Edition Dated 10122012 News on ACK MS Subbulakshmi Graphic Novel
Indian Express Chennai Edition Dated 10122012 News on ACK MS Subbulakshmi Graphic Novel
The New Indian Express Dated 12122012 Hyd Edition Graphic Biography on Ms
The New Indian Express Dated 12122012 Hyd Edition Graphic Biography on Ms
Kutcheri Bhavan News Update on Lakshmi Devnath 2nd Graphic Novel
Kutcheri Bhavan News Update on Lakshmi Devnath 2nd Graphic Novel

Calvin & Hobbes பற்றிய ஒரு அருமையான Search எஞ்சின்: உலக அளவில் புகழ் பெற்ற தினசரி காமிக் ஸ்ட்ரிப் Calvin & Hobbes தொடர்களை பற்றி அறியாதவர்கள் மிகவும் குறைவானவர்களே இருக்க முடியும். இப்போது கூட தி ஹிந்து,டெக்கன் குரோனிக்கல் என்று தினசரி ஸ்ட்ரிப் ஆகவும், சன்டே ஸ்ட்ரிப் ஆகவும் கலக்கிக் கொண்டு இருக்கும் இந்த தொடரின் அனைத்து விஷயங்களையும் முழுமையாக ஒரு வெப்சைட்டில் உட்புகுத்தி இந்த காமிக்ஸ் ஸ்ட்ரிப் தொடரைப்பற்றிய களஞ்சியமாக (அட, இயக்குனர் களஞ்சியம் கிடையாதுங்க, செய்தி களஞ்சியம்) உருவாக்கி இருக்கிறார்.

நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் பற்றியும் இப்படி ஒரு காமிக்ஸ் Search எஞ்சின் அமைப்புடைய தளம் அமைக்க விருப்பமே. உதவ விரும்பும் டெக்னிகல் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Times Of India Chennai Edition Page No 13 Dated 10th Dec 2012 Sunday Calvin and Hobbes  Search
Times Of India Chennai Edition Page No 13 Dated 10th Dec 2012 Sunday Calvin and Hobes  Search

ரிப்போர்டர் வேலையை விட்டுவிட்டு ப்ளாக்கராக மாறிய சூப்பர்மேன்: Even though, இரண்டு மாதங்களுக்கு முன்பான நியூஸ் ஆக இருந்தாலும்  இது ஒரு முக்கியமான நியூஸ் என்பதால் இங்கே வெளியிடப்படுகிறது. தன்னுடைய நியூஸ் ரிப்போர்டர் வேலையை கிளார்க் கென்ட் (அதாவது சூப்பர்மேன்) ராஜினாமா செய்து விட்டார். இனிமேல் ஒரு ப்ளாக்கராக இருப்பார் என்ற இந்த தகவல் பல தினசரிகளில் அலசப்பட்டு இருந்தது. CNN-IBN நியூஸ் சேனலில் கூட இதனைப்பற்றிய ஒரு சிறப்பு தகவல் அடங்கிய கேப்சியூல் ஒளிபரப்பினார்கள்.

Deccan Chronicle Daily Chennai Edition Chennai Chronicle Page No 23 Dated Thursday 25th Oct 2012 What is Clark Kents Next Job
Deccan Chronicle Daily Chennai Edition Chennai Chronicle Page No 23 Dated Thursday 25th Oct 2012 What is Clark Kents Next Job
The Hindu Daily Chennai Edition Page No 14 Dated  Thursday 25th Oct 2012 Superman Quits Daily Planet
The Hindu Daily Chennai Edition Page No 14 Dated  Thursday 25th Oct 2012 Superman Quits Daily Planet
Times Of India Daily Chennai Edition Page No 16 Dated Thursday 25th Oct 2012 Superman Goes Digital
Times Of India Daily Chennai Edition Page No 16 Dated Thursday 25th Oct 2012 Superman Goes Digital
Times Of India Daily Chennai Edition Page No 13 Dated Sunday 28th Oct 2012 Superman Quits Again
Times Of India Daily Chennai Edition Page No 13 Dated Sunday 28th Oct 2012 Superman Quits Again

மற்ற காமிக்ஸ் தகவல்கள்: இவை இரண்டுமே Self Explanatory நியூஸ் வகையை சார்ந்தவை என்பதால் படித்து இன்புறுங்கள்.

Times Of India Daily Chennai Edition Times Life Page No 4 Dated Sunday 28th Oct 2012 Archie Theory
Times Of India Daily Chennai Edition Times Life Page No 4 Dated Sunday 28th Oct 2012 Archie Theory
The Hindu Daily Chennai Edition Page No 8 Sunday Magazine Dated  Sunday 28th Oct 2012 Childrens Books
The Hindu Daily Chennai Edition Page No 8 Sunday Magazine Dated  Sunday 28th Oct 2012 Childrens Books

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Monday, April 23, 2012

17 Comic Cuts 41–News 41: காமிக்ஸ் காதலர் இயக்குனர் மிஷ்கின் - குமுதம்,ஆனந்த விகடன் பேட்டி

காமிரேட்ஸ்,


வணக்கம், வந்தனம் மற்றும் அனைத்து விதமான வரவேற்ப்புகளும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. காமிக்ஸ் மற்றும் என்னுடைய தேவை அறிந்து, நான் தேடும் புத்தகங்களை பரிசளித்த மதுரை மற்றும் தேனி நண்பர்களுக்கு உள்ளம் குளிர்ந்த அதே மூன்று எழுத்துக்கள் - நன்றி - இதைதவிர வேறென்ன சொல்ல முடியும், சொல்லுங்கள்.

Kumudam Tamil Weekly Issue Dated 25042012 On Stands 18042012 Cover Story Dir Mysskin Interview

Kumudam Tamil Weekly Issue Dated 25042012 On Stands 18042012 Cover Story Dir Mysskin Interview
கண்டிப்பாக இந்த ஆண்டில் நிறைய பதிவுகளும், தகவல்களும், முடிந்தால் சில பல காமிக்ஸ் சந்திப்புகளையும் அரங்கேற்றுவோம் என்பதே இப்போதைய ஒரே வாக்குறுதியாக இருக்கிறது. இதனை நிறைவேற்ற இயன்ற வரையில் பாடுபடுவேன்.
 
என்னுடைய விருப்பங்களுக்கு மட்டுமே இதுவரையில் பதிவிட்டு வந்த இந்த பாரதிராஜா கிங் விஸ்வா, இனிமேல் உங்களின் இந்த நன்றிக்கு கடன்பட்டு, உங்களுக்காகவும் பல பதிவுகளை இடுவேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகையால் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இந்த வலைப்பூவில் ஏகப்பட்ட பதிவுகளை நீங்கள் காணப்போகிறீர்கள். பீ ஃகேர்புல்.

கடந்த மூன்று மாதங்களாக பல காமிக்ஸ் தகவல்கள், நிகழ்வுகளை இந்த தளத்தில் பதிவிக்க நான் தவறிவிட்டேன். அதில் ஒரு முக்கியமான நேர்காணலும் இருந்தது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக கல்கி வார இதழில் இயக்குனர் திரு மிஷ்கின் அவர்களின் நேர்காணல் இடம்பெற்று இருந்தது. அந்த நேர்காணலில் அவர் தன்னுடைய காமிக்ஸ் மீதுள்ள காதலை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தார். அந்த நேர்காணல் இந்த வலைப்பூவில் இடம்பெற தேவை இருந்தாலும், மிக மிக விரைவில் மீண்டும் இடம்பெறும் என்று உறுதி கூறுகிறேன். 

ஆகையால் இன்றுமுதல் நீங்கள் எந்தவிதமான காமிக்ஸ் குறித்தான தகவல்களை ஏதாவது பத்திரிக்கையில் படித்தாலோ, அல்லது ஏதாவது ஊடகத்தில் பார்த்தாலோ உடனடியாக என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு (tamilcomicsulagam@gmail.com) தெரியப்படுத்துங்கள். அவை இங்கே உடனடியாக வலையேற்றப்படும்.

அப்படி என்றால் ஏன் இந்த பதிவு மட்டும் கிட்டதட்ட ஒரு வார இடைவெளியில் இங்கே பதிவேற்றப்படுகிறது என்றால் ஒரே ஒரு காரணம் மட்டுமே: என்னுடைய ஸ்கான்னர் பழுதடைந்து,வேறு புதிய ஸ்கான்னர் வாங்க ஏற்பட்ட இடைவெளியே இந்த ஒரு வார கால தாமதம். இனி தாமதமின்றி இந்த பதிவுக்குள் நுழைவோம். இந்த மாதிரி பதிவுகளில் நாம் சொல்ல எதுவுமே இல்லை என்பதால் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

Kumudam Tamil Weekly Issue Dated 25042012 On Stands 18042012 Cover Story Dir Mysskin Interview Page No 18 19
Kumudam Tamil Weekly Issue Dated 25042012 On Stands 18042012 Cover Story Dir Mysskin Interview Page No 18 19
Kumudam Tamil Weekly Issue Dated 25042012 On Stands 18042012 Cover Story Dir Mysskin Interview Page No 20 21
Kumudam Tamil Weekly Issue Dated 25042012 On Stands 18042012 Cover Story Dir Mysskin Interview Page No 20 21

ஆனந்த விகடனில் இயக்குனர் மிஷ்கின் கொடுத்த பேட்டியால்,அதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத சிலர், வழக்கம் போல ஒரு புதிய பிரச்சினையை கிளப்ப முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு நான் கூற விரும்புவது  ஒன்றே ஒன்றுதான் Best of Luck.

Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview Page No 40 41
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview Page No 40 41
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview Page No 42 Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview Page No 42 Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, July 08, 2011

10 Comic Cuts 34-News 34: M.S.Subbu Lakshmi’s Graphic Novel (Kungumam), Spider Man’s Death (Kumudham) & A New Steel Claw?

Dear ComiRades,

Welcome back to TCU with another dose of Comics & related news features. As TCU is nearing 100 posts, the number of news posts (Comic Cuts) keep on increasing and this trend is rather healthy. Healthy in the sense that at least we have some news and related articles when we don’t have enough comics in Tamil. Hopefully this shortage of Comics will be overcome very shortly and we will be having our monthly new comics review very, very soon. Enough of the future and let’s get on with the current news.

01 Kungumam – Lakshmi Devnath’ s Graphic Novel: Since the launch, this particular book is getting more and more positive reviews in the media space and this holds good for the other entrants in the graphic novel domain. The message is loud and clear: If the content is good and provided the presentation is world class, we will welcome with both arms. Now, it is the turn of Kungumam Weekly and the review is wonderful, to say the least.

Kungumam Tamil Weekly - Issue Dated 11072011 - Page No 70 - Article on MS Subbulakshmi Graphic Novel – Conceptualized & Created By Ms Lakshmi Devnath

Kungumam Tamil Weekly Isue Dated 11072011 Page No 70 Article on MS Subbulakshmi Graphic Novel

02 Kumudham – Spider man’s Death: TCU has already covered this particular news in the regular Comic Cuts section in THIS post. On the heels of those news articles in English news papers comes this article in Kumudham weekly. Sadly none of the other frontline media cared to give coverage to this news. Anyway, here is what Kumudham got to say on this topic.

Kumudham Tamil Weekly Issue dated 13072011 Page No 30 Spiderman's Death Kumudham Tamil Weekly Dated 13072011 Page No 32
Kumudham Tamil Weekly Issue dated 13072011 Page No 30 31 Spiderman's Death Kumudham Tamil Weekly Issue dated 13072011 Page No 32 Spiderman's Death

03 Dina Malar Siruvar Malar – Another Steel Claw?: We all loved THE Steel Claw aka Irumbuk kai Maayavi (இரும்புக்கை மாயாவி) as he is known in South India since the last 41 years. There have been more than a dozen copy-cat Steel claws from the local comics stories and most of them were failures and the few ones which got some sort of success was from Mullai Thangarasan himself. Some years ago, there was a TV Serial in Jaya TV which was in 3-D format where the hero had similar traits to that of Louis Crandell.  Now, here comes another one. Some time back TCU has done a post about the resurrection of Siruvar Malar. Sadly, they have reverted to the old style with very little space for comics, that too translated from Hindhi market. On the wake of that thought, here is Lee Rock.

Remember, you can read Siruvar Malar free of cost in their home page. Here is the link for that: Siruvar Malar

Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 22 Lee Rock Becomes Steel Claw 01 Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 23 Lee Rock Becomes Steel Claw 02
Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 24 Lee Rock Becomes Steel Claw 03 Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 25 Lee Rock Becomes Steel Claw 04

Well, that's all for the time being & TCU will be back with the next issue of Mekala Comics in the next post-which happens to be one of the very few Special issues in Tamil comics history where Editor S.Vijayan was not involved. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Sunday, June 26, 2011

14 Comic Cuts 32-News 32: ‘Nool’ Pandiyan, Graphic Novel on M.S.Subbulakshmi & TV Celebrity Reading Comics

Dear ComiRades,

Welcome back to TCU after a very short break. Over the last 3 months, the trend on the number of posts and the sequence has been similar. Not much posts in the first 20 days and a continuous uploading of them in the next 10 days. Even in this month, the trend is following and try as hard, TCU couldn’t break the repeating of the same trend. Hopefully from next month onwards the trend may get reversed. However, one good thing for the last 3/4 months is that the number of posts is being constant: A Minimum of 5 posts per month, though most of them are Comic Cuts and TCU Presents series. A Lot of reader request are arriving with post requests on golden oldies of Tamil comics being the top of the request list. TCU is trying the best to accommodate them in the near future.

Moving on to the current post, this Comic Cuts is also similar to that of the News Post 28 (Comic Cuts 28) for the simple reason that all the news items are in Tamil language. TCU will try to differentiate the news articles in language wise in the near future as well. Henceforth the news articles in English will be segregated and posted in a single post and the remaining Tamil news articles related to Comics will be featuring in Tamil Comic Cuts.

01 Puthiya Thalaimurai – Nool Pandiyan: The name Nool Pandiyan is very popular amongst book collectors. Ever since TCU regained the Comics interest, the hunt was on to get the missing issues of Tamil comics and at that time Nool Pandiyan was introduced by one of the ComiRades. Nool Pandiyan is more popular and got more access to many book series than Mylapore Alwar and his book shop. His TV Interview will also be featured in the forthcoming Comic Cuts with the video. Watch out for that.

Note: Nool Pandiyan can be reached at This mobile Number: +91 94444 29649.

Puthiya Thalaimurai - Tamil Weekly - Issue Dated 23062011 - Page No 44 – Article on Nool Pandiyan By Yuva Krishna – Titled ad Pandiyan Parisu

Puthiya Thalaimurai Tamil Weekly Issue Dated 23062011 Page No 44 Pandiyan Parisu

02 Dina Malar – Nool Pandiyan: The very next day, this particular piece was carried out in Dina Malar in the page next to the headliner. Dina Malar has been doing this kind of Un-credited article usage for many years. However, since it has given more mileage to out best friend, we left the stones as they were.

DinaMalar Tamil Daily Dated 18062011 Nool Pandiyan Article
DinaMalar Tamil Daily Dated 18062011 Nool Pandiyan Article

03 Anantha Vikatan – M.S.Subbulakshmi Graphic Novel: TCU has done a complete post on this book and that can be read over here (TCU Presents 04). It was nice to see leading magazines give their due respect to a honest work in the field of Comics. TCU expects much more coverage for the same in the near future.

Anantha Vikatan Tamil Weekly - Issue Dated 29062011 - Vikatan Jannal Section – Page No 96 - Book Intro - Heritage Press M.S.Subbulakshmi Graphic Biography
Anantha Vikatan Tamil Weekly Issue Dated 29062011 Vikatan Jannal Section Book Intro Heritage Press M

04 Dina Mani Kathir – M.S.Subbulakshmi Graphic Novel: Anantha Vikatan has given only a small introduction about the book. Dina Mani Kathir has given a wonderful review of the same with photos and scans. We expected such work from Dina Mani based on their literary likening. Hopefully their own Children's magazine (Siruvar Mani) may get revamped, just like Dinamalar Siruvar malar gotten for a shorter period.

Dina Mani Kathir Weekly Supplement to Daily Dina Mani Dated 26062011 Page 01 Dina Mani Kathir Weekly Supplement to Daily Dina Mani Dated 26062011 Page 02
DinaMani Kathir Weekly Supplement to Tamil Daily Dinamani Dated 26062011 Page 01 DinaMani Kathir Weekly Supplement to Tamil Daily Dinamani Dated 26062011 Page 02

Kungumam – Graphic Novel on Steve Jobs & Kumudham – Mamathi Chari reading Comics: Most of the Tamilians know that Mamathi chari is a popular RJ/TV Compere. She was also an ex colleague of Yours truly. During those days, the Comics fire was not re-ignited with Yours truly and hence may not looked after those interest. The next time we meet, you can bet on the topic of the 1st question. The Photo of SriDevi was un-edited in the scan for some old timers.

Kungumam Tamil Weekly Dated 27062011 Page No 02 News Way Comics Book on Steve Jobs

Kumudham Tamil Weekly Issue Dated 29062011 Page No 48 Mamathi Chari Reading Tamil Comics Cut

Kungumam Tamil Weekly Dated 27062011 Page No 02 News Way Comics Book on Steve Jobs Kumudham Tamil Weekly Issue Dated 29062011 Page No 48 Mamathi Chari Reading Tamil Comics Cut

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, May 17, 2011

22 கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ் Ponnar Sankar Comics

தமிழ் சினிமாவில் பிரபலமான கதையாசிரியர்களில் கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. திராவிட கழக பிரச்சாரதிர்க்கும், கொள்கை பரப்ப உதவும் ஒரு கருவியாகவும் கதை மாந்தர்களை உபயோகப் படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டாலும், கருப்பு வெள்ளை காலத்தின் மத்திம தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பல வசனங்கள் கலைஞர் எழுதியதே. பராசக்தி, மனோகரா என்று இன்றளவும் அவரது வசனங்கள் பல இடங்களில் பல படங்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த படங்களை தவிர கலைஞர் வசனம் எழுதி சிறப்பாக பேசப்பட்ட படங்களாகிய மலைக்கள்ளன், புதுமை பித்தன், மருதநாட்டு இளவரசி போன்றவையும் வெற்றி பெற்றவையே. இவையெல்லாம் தமிழ் சினிமாவின் மத்திம காலத்தில் வந்த படங்கள்.

கருப்பு வெள்ளையில் இருந்து முழு வண்ணத்திற்கு படங்கள் மாறிய பின்னரும் கலைஞர் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினர். குறிப்பிடும்படியான படங்கள் என்று நீதிக்கு தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனிக்கள், நியாயத்தராசு, தென்றல் சுடும்  போன்றவற்றை சொல்லலாம். இவையெல்லாம் எண்பதுகளில் வந்தவை (என்று நினைக்கிறேன்). கலைஞர் ஆட்சியில் இல்லாதபோது நிறைய நேரம் இருந்ததால் இப்படி ஒரே படங்களாக எடுத்துக்கொண்டு இருந்தார் என்று கிண்டலாக சொல்வோரும் உண்டு. இந்த படங்கள் எல்லாம் அவை ரிலீஸ் ஆன காலகட்டங்களில் சிலாகித்து பேசப்பட்டாளும்கூட இவற்றில் எதுவுமே மகத்தான வெற்றி பெற்ற (சூப்பர் ஹிட்) படங்கள் இல்லை என்பதை தீவிர திமுக அனுதாபி கூட சொல்லிவிடுவார்.

ஆனால் தற்போதைய புதிய தலைமுறைக்கு கலைஞர் கொடுத்துள்ள படங்களை சற்றே பார்ப்போம்: பாசக்கிளிகள் (உண்மையில் இந்த படத்தின் பெயர் பாசக் மட்டும்தான், போஸ்டரிலேயே பாசக் என்று மட்டும்தான் போட்டு இருப்பார்கள். அருகில் மூன்று கிளிகளின் படங்கள் இருக்கும். நாம் அதனையும் இணைத்து படித்து பாசக்கிளிகள் என்று புரிந்துகொள்ள வேண்டுமாம்), கண்ணம்மா, உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் போன்றவையே. இவற்றை எல்லாம் பார்த்த (அ) கேள்விப்பட்ட இன்றைய புதிய தலைமுறை கண்டிப்பாக கலைஞரை ஒரு மொக்கையான எழுத்தாளர் என்றே முடிவெடுதிருப்பார்கள்.  உண்மையை அறிய இவர்கள் கண்டிப்பாக பராசக்தி, மனோகரா போன்ற படங்களை பார்க்கப்போவதும் இல்லை. பார்த்தவர்கள் சொல்வதை கேட்கப்போவதும் இல்லை. ராணி காமிக்ஸின் கடைசி காலத்தில் வந்த மொக்கை கதைகளை மட்டுமே படிக்கும் வாய்ப்பை பெற்ற இன்றைய புதிய தலைமுறை ஒட்டுமொத்த ராணி காமிக்ஸ் கதைகளையும் மொக்கை என்று சொல்வதைப்போன்றது இந்த கருத்து.

இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும்விதமாக கடைசியாக ஒரு ஹிட் கொடுங்கள் கலைஞரே என்று திமுக திம்மிகள் பலரும் ஆசைப்பட அதற்க்கு பதில் சொல்லும்விதமாக வந்ததே பொன்னர் சங்கர். (ராஜ்கிரண் போல மீசையை முறுக்கிக்கொண்டு சொல்வதனால் பொன்னர்-----------------------------------------------------ஷங்கர்).  யுவகிருஷ்ணா சொல்வதைப்போல, கடந்த இரு தசாப்தங்களாக கலைஞர் மொக்கையாக மட்டுமே வசனம் எழுதுவார் என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டை தூள் தூளாக்கியிருக்கும் திரைப்படம் பொன்னர் சங்கர். இந்த படத்தை பற்றிய ஒரு ஒப்பீட்டிற்கு செல்லும்முன் ஒரு சிறிய ப்ளாஷ் பேக்:

கதையின் வடிவம்: கொங்குமண்டலம் என்று சொல்லப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் எல்லை தெய்வங்களாக இன்றளவும் வழிபடும் குல தெய்வங்களாக இருப்பவர்களே பொன்னர் சங்கர் (இவர்களின் கோவில்கள் பற்றிய ஒரு நேரடி பதிவிற்கு இங்கே கிளிக்கவும்). கதையானது பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், கதையின் முக்கிய பாத்திரங்கள் இரண்டு இனங்களை சேர்ந்தவர்களாகவும் (வெள்ளாளர் மற்றும் வேட்டுவ இனத்தார்) பரம்பரைக் கதைகளாக சொல் வழக்கில் கூறப்பட்டு பின்னர் தமிழக கலைகளில் ஒன்றாகிய உடுக்கையடிப்பாடல் மூலம் பிரபலப்படுதப்பட்டு (முக்கியமாக அழியாமல் தொடர்ந்து வழக்கில் இருக்க வகை செய்து) வந்த கதையே இது.

உடுக்கையடிப்பாடல் மூலம் இந்த கதையானது பரம்பரை பரம்பரையாக பயணம் செய்து வந்தது. ஒரு காலகட்டத்தில் எங்கே வெறும் சொல் வழக்கில் இருந்தே அழிந்து விடுமோ என்ற சிந்தனை தலைதூக்க ஆரம்பித்த நேரத்தில் இந்த கதையை எழுத்துருவாக்க பலரும் நினைத்தனர். அவ்வாறே திரு பிச்சன் அவர்கள் முன்வந்தார். இவரே இந்த கதையை அண்ணன்மார் கதை என்ற பெயரில் எழுதினார். இவருடைய கதை வடிவை ஒட்டியே இன்றளவும் பலராலும் பொன்னர் சங்கர் கதைகள் எழுதப்படுகின்றன (வால்மீகி ராமாயணத்தை எழுதினாலும், அதனை சார்ந்து தங்கள் நடையில் பலரும் எழுதுவதைப்போல).

கலைஞரின் பொன்னர் சங்கர் தொடர்கதை

எண்பதுகளின் மத்திமத்தில் (17-07-87) குங்குமம் இதழில் கலைஞரின் கைவண்ணத்தில் தொடர்கதையாக வாராவாரம் வந்து (62 weeks) கலைஞர் ரசிகர்களால் சிறப்பாக பேசப்பட்ட தொடர்கதை இந்த பொன்னர் ஷங்கர். தொடர்கதைக்கு கோட்டோவியங்கள் வரைந்தவர் கோபுலு. முதல் வாரம் கலைஞர் கருணாநிதி அவர்கள் பொன்னர் சங்கர் பற்றி ஒரு முன்னுரையை எழுதி இருப்பார். மொத்தம் எட்டு பக்கங்களுக்கு வந்த அந்த முன்னுரை ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல. இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து அறுவது வாரங்கள் கதை விறுவிறுப்பாக சென்றது. கதை முடிந்த பின்னர் ஒரு முடிவுரையை எழுதி சில விளக்கங்களையும் அளித்தார் கருணாநிதி. ஆக மொத்தம் அறுபத்தி இரண்டு வாரங்கள் வந்த இந்த பொன்னர் சங்கர் தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை கதை முடிந்த பின்னர் வந்த வாசகர் கடிதங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த கதையானது வேறெந்த பதிப்பகம் மூலமாக தனி புத்தகமாக வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்த வாசகர்கள் யாரேனும் பின்னூட்டங்கள் மூலம் தெரிவியுங்களேன்.

முன்னுரை - நுழைவாயில்: முன்சொன்னது போல, கலைஞர் அவர்கள் ஒரு முன்னுரையை இந்த கதையின் முதல் இதழில் வெளியிட்டார். அதனைக்கூட கவித்துவமாக நுழைவாயில் என்று பெயரிட்டு தன்னுடைய கதையின் ஆதாரங்களை பற்றியும் தான் இந்த குறிப்பிட்ட கதையை எழுதியதின் காரணத்தையும் கூறுகிறார். இந்த குறிப்பிட்ட புத்தகத்தினை இப்போது பலராலும் தேடிப்பிடித்து படிக்க இயலாது என்ற காரணத்தினால் முதல் பாகம் முழுமையும் உங்களின் பார்வைக்கு:

Prologue 1
Prologue 2
Prologue 3
Prologue 4

தன்னுடைய கண்களை பராமரிக்க அர்ச்சனா என்ன செய்கிறார் போன்ற செய்திகளை விட்டுவிட்டு கதையின் முன்னுரையை மட்டும் படித்து விட்டீர்கள் அல்லவா? முதல் இதழில் படங்கள் அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு கோட்டோவியம் மட்டுமே இருக்கும். அதுவும் போர்ட்ரெய்ட் போல வரையப்பட்டு இருக்கும். ஆகையால் கோபுலு அவர்களின் ஓவியத்திறனை இதில் அவ்வளவாக காண இயலாது. கதையின் கடைசி பாகத்தில் இருக்கும் ஓவியத்தில் இருக்கும் அந்த நுணுக்கமான டீடய்லிங்'ஐ சற்றே கூர்ந்து பாருங்கள். அவரது திறமைக்கு இது ஒரு சிறிய சான்று. 

குங்குமம் வார இதழ் - பொன்னர் சங்கர் - அண்ணன்மார் கதை - முதல் பகுதி - கதை: கலைஞர் கருணாநிதி - ஓவியங்கள்: கோபுலு

First Episode

இந்த கதையை எழுத ஆரம்பித்த உடனேயே பல சர்ச்சைகளும் ஆரம்பித்தன. தவறான புத்தகங்களையும் ஆதாரமில்லாத தகவல்களையும் மேற்கோள் காட்டி கலைஞர் இந்த கதையை எழுதுகிறார் என்று பல கடிதங்களும், புகார்களும் எழ, கலைஞர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விளக்கம் அளித்தார்.

ஏனோ தானோ என்று எழுதவில்லை அண்ணன்மார் வரலாறு - ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் - கலைஞர் மேற்கொண்ட பயணங்கள்

Research

இவ்வாறாக பல ஆரம்பகால சர்ச்சைகளுக்கு பிறகு அண்ணன்மார் கதை ஒரு வருடத்திற்கு மேலாக வெற்றியுடன் வெளிவந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்றது.வரலாற்று கதைகளுக்கு வரவேற்ப்பு குறைந்து இருந்த அந்த காலகட்டத்தில் இவ்வாறாக ஒரு வருடம் ஒரு வரலாற்று தொடர்கதை விறுவிறுப்புடன் வெளிவந்தது பாராட்டத்தக்கதே. இந்த ஓவியத்தை பாருங்கள். நீண்ட சடை முடிகளை கொண்டு (வைகிங்குகளை போல), தினவெடுத்த தோள்களுடன் இருக்கும் அந்த வீரனை பாருங்கள். கோபுலு அவர்கள் கேலிச்சித்திரங்கள் மட்டுமில்லாமல் இதுபோல மனதை கவரும் அற்புதமான மூவிங் ஓவியங்களையும் வரைவதில் வல்லவர் என்பது நிரூபணமாகும். (இந்த படத்தை பார்த்தவுடனே நண்பரொருவர் இந்த ஓவியத்தில் இருப்பது கண்டிப்பாக சகோதர-சகோதரி உறவு முறையாளர்கள் என்பதை அடித்து சொன்னார். அது எப்படி கதையை பற்றி தெரியாமல், படிக்காமல் சொல்ல முடிகிறது என்று விசாரித்தால், அவர்கள் அணைத்து இருக்கும் முறையிலேயே அது தெரிகிறது என்று கூறினார்).

குங்குமம் வார இதழ் - பொன்னர் சங்கர் - அண்ணன்மார் கதை - கடைசி பகுதி - கதை: கலைஞர் கருணாநிதி - ஓவியங்கள்: கோபுலு

Last Episode

இவ்வாறாக கதையை முடித்தவுடன், அதில் விளக்கமளிக்க வேண்டிய இடங்கள் பல இருப்பதை உணர்ந்த கலைஞர் உடனடியாக ஒரு முடிவுரையை எழுதினர். அதில் கதை முடிந்தவுடன் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் விளக்கினார். அந்த கடைசி பாகத்தின் முழு ஸ்கான் பக்கங்கள் இதோ:

Epilogue 1
Epilogue 2
Epilogue 3
Epilogue 4Cover

பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு by இல.பரணன்கதை குறித்த சர்ச்சைகள்: மிகவும் பரவலாகவும் சிறப்பாகவும் பேசப்பட்ட இந்த கதையில் பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழாமலில்லை. குறிப்பாக கதையின் போக்கும், ஒரு குறிப்பிட்ட இனத்தினரை பழிக்கும் வகையிலும் மற்றொரு இனத்தாரை உயர்த்தியும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டது இந்த கதை என்று இன்றளவும் சொல்வோர் உண்டு. கரூரில் இயங்கும் பெரியாரியல் கலை இலக்கிய ஆய்வு மன்றத்தை சார்ந்த வரலாற்று சமூக ஆய்வாளர் திரு.இல.பரணன் அவர்கள் கூற்றுப்படி இந்த கதையின் மூலப்படியாக இருக்கும் பிச்சன் அவர்கள் எழுதியதற்கே வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அதில் செய்துள்ள தவறுகளையே மற்றவர்களும் பின்பற்றி வந்தார் என்று கூறுகிறார். குறிப்பாக பிச்சன் அவர்களின் மூலப்படியில் வேளாளர் இனத்தாரை உயர்வாகவும், வேட்டுவரை தாழ்த்தியும் ஆதாரமின்றி எழுதி இருப்பதை குறிப்பிடுகிறார், மேலும் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த புத்தகமானது சாதி வெறியை தூண்டும் வகையில் இருந்ததால் அப்போதே இந்த புத்தகம் தடை செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு இவர் எழுதியுள்ள பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும்.

பொன்னர் சங்கர் காமிக்ஸ் தொடர்

தொடர் கதை வடிவில் ஒரு வடத்திற்கு மேலாக வந்து பெருவெற்றி பெற்ற பொன்னர் சங்கர் கதையை தொடர்ந்து 2 வருடங்கள் கழித்து இதே கதை புதிய தலைமுறை வாசகர்களை கவரும் வகையில் முழுக்க முழுக்க சித்திரக்கதை வடிவில் (காமிக்ஸ்) வருவதாக விளம்பரம் செய்யப்பட்டவுடன் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. தொடர் கதை வெளிவந்த போது கோபுலு அவர்களின் கோட்டோவியங்கள் கதைக்கு உயிரூட்டின. அதே எதிர்பார்ப்பில் வாசகர்கள் இருந்தனர். இந்த சித்திரக்கதைக்கு ஓவியங்களை வரையப்போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கரோ என்ற புதிய ஓவியரின் (காமிக்ஸ் ரசிகர்களுக்கு புதியவர்) கைவண்ணத்தில் இந்த சித்திரத்தொடர்கதை ஆரம்பித்தது. நாற்பது வாரங்கள் வந்த இந்த கதை மீள்வாசிப்பில் மிகவும் சிறப்பாக தோன்றுகிறது. மொத்தம் இருநூறு பக்கங்கள் கொண்ட இந்த கதை (ஒவ்வொரு வாரமும் ஐந்து பக்கங்கள்) 80 பக்கங்கள் முழு வண்ணத்திலும், மீதமுள்ள 120 பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் வந்தது.

இந்த காமிக்ஸை ஒரு நூலகர் தொகுத்து பைண்டிங் செய்து வைத்திருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அதனை நான் கையகப்படுதினேன். அப்போது முதல் ஒவ்வொரு முறையும் இந்த கதையை படிக்க முயலும்போதெல்லாம் ஐந்து பாகங்களுக்கு மேல் கதையின் போக்கில் பயணிக்க இயலாமல் போனது. கதையில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதும், கதையின் ஓட்டம் வேகமாக இருப்பதும் அவற்றிற்கு காரணங்கள் என்றாலும் என்னுடைய சோம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த கதையை திரைப்பட வடிவில் பார்த்தவுடன் அன்றிரவே புத்தகத்தை எடுத்து படித்து விட்டேன். அப்போது எனக்கு மந்தியப்பன்தான் பிரகாஷ் ராஜ், காளியண்ணன் தான் நெப்போலியன், குன்றுடையான் தான் ஜெயராம் என்று நடிகர்களை கொண்டு பாத்திரங்களை இனம்காண முடிந்தது. மிகவும் சுலபமாக கதையை புரிந்து கொண்டு படித்து விட்டேன். அந்த கதையின் முதல் பாகம் இதோ: 

Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 01

Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 02

Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 01 Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 02
Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 03 Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 04
Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 05 Map
Map உதவி: K.Senthil Sivan (முழு கதையையும் படிக்க, இங்கே கிளிக்வும்)

பெரியகாண்டியம்மன் திருக்கோவில், வீரப்பூர் - கரூர்
Photo ஜெகதீஸ்வரன்: கோவில் பற்றிய முழு பதிவிற்கு இங்கே கிளிக்கவும்.

கிட்டதட்ட தொடர் கதையை அப்படியே காமிக்ஸ் வடிவத்திற்கு (எழுத்து வடிவில் இருந்து படங்களிற்கு) மாற்றி இருந்தார்கள். இவ்வாறு நடந்த போது கலைஞர் அவர்கள் அந்த விவகாரங்களில் பங்கேற்றாரா என்பது தெரியவில்லை. [ஏனென்றால் அவ்வாறு செய்வது சாதாரண வேலையல்ல. ஒரு திறமை வாய்ந்த கதாசிரியராலேயே அவ்வாறு செய்ய இயலும். தமிழில் தான் எழுதாத ஒரு கதைக்கு இவ்வாறு காமிக்ஸ் வடிவிற்கு மாற்றியவர் ஒருவர் உண்டென்றால் அவர் நம்ம வாண்டுமாமா தான். தமிழில் கதை: X , படக்கதை வடிவாக்கம்: வாண்டுமாமா, ஓவியங்கள்: Y என்று வந்த கதையை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக காண்போம்].

மிகவும் திறமையாக எடிட்டிங் செய்யப்பட்டு படக்கதை வடிவில் வந்த இந்த தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்றால் அது வியப்புக்குரியதல்ல. கண்ணைக்கவரும் வண்ணக்கலவையும், சிறப்பான கோணங்களையும் கொண்டு அமைந்த இந்த சித்திர தொடர்கதை இன்றைய இந்த புதிய தலைமுறைக்கு நான் முன்மொழியும் கதைகளில் ஒன்றாகும். கதையின் நாற்பதாவது மற்றும் கடைசி பாகம் இதோ:

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 01

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 02

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 01 Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 02
Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 03 Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 04

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 05

பொன்னர் சங்கர் திரைப்படம்: சமீபத்தில் திரைக்கு வந்து 'வெற்றிகரமாக' ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை படம் ரிலீஸ் ஆன இரண்டாம் நாளே பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நண்பர்களுடன் சென்று படத்தை பார்க்க முடிவு செய்தோம். எங்களைப்போன்ற கோயிஞ்சாமிகளின் வழிகாட்டி மட்டும் வருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார். இதுநாள் வரை அவர் இந்த படத்தை பார்க்கவில்லை என்று சிறு பறவை சொல்கிறது. ஒரு சிறந்த படத்தை அவர் மிஸ் செய்து விட்டார் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஆமாம் தோழர்களே, ஒரு விறுவிறுப்பான மன்னர் கால (பீரியட் படம்?) தமிழ் படத்தை பார்த்து பல வருடங்களாகிறது. அந்த குறையை பொன்னர் சங்கர் போக்கி விட்டது. Ponnar Sankar Tamil Movie Poster

இந்த காமிக்ஸ் கதையை படித்துவிட்டு மறுபடியும் (சத்தியமாக) இரண்டாம் முறையாக படத்தை பார்த்தபோது ஆச்சர்யம் ஏற்ப்பட்டது. அதாவது சிதிரக்கதையின் கட்டங்கள் எவ்வாறு நகர்கிறதோ அவ்விதமே கதையும் முன்னேறியது. கிட்ட தட்ட இந்த படக்கதை ஒரு ஸ்டோரி போர்ட் ஆகவே உபயோகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் தியாகராஜன் கண்டிப்பாக இந்த காமிக்ஸ் கதையை படித்திருக்க வாய்ப்பிலாத வேளையில் எப்படி இந்த ஒற்றுமை ஏற்பட்டது என்று வியந்தேன். படத்தின் பல காட்சிகள் அப்படியா காமிக்ஸ் கதை நகர்வது போல இருந்தது.

ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும், நாசர் வேடத்திற்கு அதே லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் வரும் கேண்டால்ப் பாத்திரத்தையும் உபயோகப்படுத்தாமல் இருந்திரக்கலாம். அட, உண்மையிலேயே படத்தின் மத்தியில் (இரண்டு ஹீரோயின்களை காப்பாற்றும் காட்சியில்) வரும் சண்டைக்காட்சிகள் அப்படியே லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போல படத்தின் இரண்டாம் பாகத்தில் வருவதைப்போல இருக்கும். தியாகரஜான் ஒரு கலைரசனை கொண்ட இயக்குனர் (உண்மையிலேயே இப்படி ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சிகளை சமீபத்தில் எந்த படத்திலும் பார்க்கவில்லை). அழகியல் காட்சிகளை மிகவும் திறமையாக வெளிக்கொனருபவர். அவர் இந்த கோ-இன்சிடென்ஸ்'ஐ தவிர்த்து இருக்கலாம்.

அதைப்போலவே இயக்குனர் தியாகராஜன் அவர்கள் ஹீரோயிசம் காண்பிக்க கதையமைப்பில் இருந்து விலகாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக கலைஞர் எழுதிய கதையில் ஆரம்பத்தில் அந்த இரண்டு ஹீரோயின்களையும் காப்பாற்றுவது உண்மையில் ராஜ் கிரணின் மகனே. பொன்னரும் சங்கரும் காப்பாற்ற முயன்றாலும்கூட முதலையிடமும், மலைப்பாம்பிடமும் அவர்களால் தனித்தே வெற்றி கொள்ள முடியாது. அப்போது ராஜ் கிரணின் மகனே வந்து இவர்களை காப்பாற்றுவார். ஆனால் கதையில் பொன்னரும் சங்கரும் தனித்தே காப்பாற்றும்படி இருக்கும். இதைதவிர கதையின் பல இடங்களில் இப்படி பல சினிமாட்டிக் சுதந்திரத்தை இயக்குனர் கையாண்டிருப்பார். குறிப்பாக படத்தின் இறுதியில் பொன்னர் மட்டுமே உயிரோடு இருப்பார். சங்கர் வீரமரணம் தழுவி இருப்பார். ஆனால் அப்படி காட்டினால் சென்டிமென்ட் அடிப்பட்டு விடும் என்று இருவரையும் உயிருடனே காட்டி இருப்பார் இயக்குனர்.

சன் டிவி - தினகரன் - குங்குமம் நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்: இந்த சித்திரக்கதையானது தமிழிக வரலாற்றில் ஒரு முக்கிய இடம்பெறக்கூடியதாகும். அப்படிப்பட்ட இந்த கதையை பலருக்கும் சென்றடையும் வகையில் ஒரு முழு நீளக்கதையாக மறுபதிப்பு செய்யலாமே? கண்டிப்பாக குங்குமம் நூலகத்திலேயே இந்த கதையின் பிரதிகள் இருக்கும். அப்படி இல்லைஎன்றாளும்கூட என்னைப்போன்ற பல வாசகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். எவ்வளவோ புத்தகங்களை மறுபதிப்பு செய்கிறார்கள். இது மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் குங்குமம் ஸ்டாலில் சந்தா விண்ணப்பங்களும், கடைசி இரண்டு மூன்று இதழ்களுமே விற்பனைக்கு இருக்கும். இது போன்ற அறிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து அங்கே விற்கலாமே?

Related Posts with Thumbnails