காமிரேட்ஸ்,
இந்த காமிக் கட்ஸ் - செய்திகள் பதிவானது பல நாட்களாக என்னுடைய கணினியில் தூங்கிக் கொண்டு இருந்தது. இந்த பதிவில் சொல்லப்பட்ட காரணங்களால் இவ்வளவு தாமதமாக வலையேறுகிறது. வழக்காமான தாமதத்திற்கு நான் காரணம் என்றாலும், இம்முறை அந்தப் பழி என்மீதில்லை என்ற வரைக்கும் சந்தோஷமே.
இரத்தப் படலம் - லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் - தினகரன் வெள்ளி மலர் சிறப்பு கட்டுரை: சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை மதியம் நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் சந்தாதாரர் தோழர் சிவராமன் அவர்கள் எனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். வழமை போல அப்போதும் ஒரு மீட்டிங்கில் இருந்து தொலைத்த நான், சிறிது நேரம் கழித்து அவரிடம் பேசினேன். இரத்தின சுருக்கமாக பேசும் அவர், இரத்தப்படலம் பற்றிய சில விவரங்களையும், லயன் காமிக்ஸ் அலுவலக தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டு, பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு நானும் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.
இது நடந்து இரண்டு வாரம் கழித்து ஒரு புனித வெள்ளிகிழமை அன்று தினகரன் வெள்ளிமலரை படித்தால், பின்னட்டையில் இந்த அற்புதமான கட்டுரை (காமிக்ஸ் பற்றிய நியூஸ் வந்ததால் அந்த வெள்ளி, புனித வெள்ளியாக மாறியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?). அடுத்து நான் சொல்லப்போகும் வசனத்தை பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக வரும் இன்ஸ்பெக்டர் சஷிகுமார் போல படிக்கவும். சாதாரண ஒரு எடிட்டர் எழுதிய கட்டுரை அல்ல இது. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் காமிக்ஸ் வெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படிப்பட்ட கட்டுரையை எழுத முடியும்.
இந்த கட்டுரை வெளியான அன்று அடியேன் இந்தியத் தலைநகரில் இருந்ததாலும், அங்கு ஸ்கான் வசதிகள் சரிப்படாததாலும் உடனடியாக பதிவிட முடியவில்லை. ஈரோட்டின் காமிக்ஸ் குபேரர் ஸ்டாலின் அவர்கள் இந்த பதிவில் இதைப்பற்றி இட்ட பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.
| Dinakaran Tamil Daily Friday Supplement Velli Malar Book Dated 10082012 Page No 24 Bourne Legacy Article by ComiRade K.N.Siva Raman |
ஒரு சோகமான பின்குறிப்பு: இந்த நியூஸ் வெளியான சிறிது நேரத்திலேயே (மதியம் பனிரெண்டு மணிக்குள்ளாக) சுமார் நாற்பது தொலைபேசி அழைப்புகள் லயன் ஜம்போ ஸ்பெஷல் இரத்தப்படலம் பற்றி விசாரித்து விற்பனைக்காக வர ஆரம்பித்து விட்டது. இது ஆரம்ப நிலை. ஆனால் சோகமான தகவல் என்னவெனில் ஏற்கனவே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன என்பதே. ஒரு தர்ம சங்கடமான நிலையை ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியமைக்கு இங்கே மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் தோழர் அவர்கள் என்ன விஷயத்திற்காக தகவல் சேகரித்தார் என்பது தெரியாத சூழலிலேயே நான் தகவல் தெரிவித்தேன். ஆகையால் .....
பெருங்களத்தூர் புத்தகக் கடை மீரா முருகன்: ஏற்கனவே திரு நூல் பாண்டியன் அவர்களின் புத்தகக் கடை பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இப்போது அடுத்த புத்தகக் கடைக்காரர். ஆனாலும் மிகவும் இனிய, பழகுவதற்கு எளிய, கூச்ச சுபாவம் கொண்ட மருகன் அவர்களிடம் காமிக்ஸ் எதுவும் இல்லையாம். பின்னே, தகவல் வந்து ஒரு மாதம் கழித்து போன் செய்தால் எப்படி இருக்கும்? என்று சொல்கிறார் நண்பர் இரவுக் கழுகு. ஆனால் அவரது Behind the screen story படிப்பதற்கு அருமையாக இருக்கிறது.
| Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article by S.Kiruba Karan |
குங்குமம் வரவேற்பறை: விகடனை தொடர்ந்து குங்குமம் வார இதழிலும் இப்போது ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகம், ஒரு இணையதளம் என்று சிறப்பாக அறிமுகம் செய்கிறார்கள். சிறுவர்களுக்கான இரண்டு தகவல்கள் இருந்ததால் அந்த ஸ்கான்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
பழைய வின்டேஜ் காமிக்ஸ் விற்பனை: படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு தகவல். சத்தியமாக நம்மூரில் இல்லை. இனி தொடர்ந்து படிக்கவும். அட, எங்க சார் போறீங்க? ஓ, இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு என்று தானே? அதுவும் ஒரு வகையில் சரிதான். தகவலுக்காக இந்த ஸ்கான்.
ராப்பிட் ராப் - ஆங்கில ஃகிராபிக் நாவல்: ஃபாரூக்கி தம்பதியினரின் இந்த சித்திரக்கதை வடிவ நாவலை மிகவும் விரும்பி படித்தேன். பள்ளி / கல்லூரி நாட்களில் அனிமல் ஃபார்ம் என்கிற அட்டகாசமான கதையை நினைவூட்டினாலும், ஒரு சதாவீதம் கூட சார்ந்திராமல் ஒரு தனிப்பட்ட கதையாகவே இந்த நாவல் இருக்கிறது. சாவகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியநேரத்து வாசிப்புக்கு உகந்தது.
ரஸ்கின் பான்ட் - ஒரு ரசிக்கும்படியான பேட்டி: சிறுவயதில் வாண்டுமாமா அவர்களுடனே பயணம் செய்ததால் ரஸ்கின் பான்ட் அவர்களின் கதை சொல்லும் திறனை ரசிக்க முடியவில்லை (அவர் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார் என்பது வேறொரு கிளைக்கதை). பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா இனைந்து நடத்திய உங்கள் ஜூனியர் மாத நாவலில் வந்த உலக புத்தக அலமாரி என்கிற கதை தொடரில் ரஸ்கின் பான்டின் ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தை படித்து வியந்தேன். அதனைவிட அந்த கட்டுரையாசிரியர் அந்த சிறுகதையை நாம் ஏன் காதலிக்கவேண்டும் என்று விவரித்தவிதம் என்னை கவர்ந்தது. இதில் கொடுமை என்னவெனில் அந்த சிறுகதையை ஏற்கனவே நான்-டீடெயில் ஆக பள்ளியில் ஏற்கனவே படிதிருந்ததுதான். அதன் பின்னர் அவரது அனைத்து சிறுகதைகளையும் தேடிப்பிடித்து படித்து விட்டேன். வாசகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தமாத (ஆங்கில) கோகுலம் இதழில் இவரைப்பற்றிய ஒரு கவர் ஸ்டோரியும் வந்துள்ளது. இனி இவரது பேட்டி:
| Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview |
நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
