Pages

Wednesday, August 29, 2012

Comic Cuts 47-News 47: இரத்தப் படலம், பெருங்களத்தூர் புத்தகக்கடை, ரஸ்கின் பான்ட்டின் ஃகிராபிக் நாவல் மற்றும் பல செய்திகள்

காமிரேட்ஸ்,

இந்த காமிக் கட்ஸ் - செய்திகள் பதிவானது பல நாட்களாக என்னுடைய கணினியில் தூங்கிக் கொண்டு இருந்தது. இந்த பதிவில் சொல்லப்பட்ட காரணங்களால் இவ்வளவு தாமதமாக வலையேறுகிறது. வழக்காமான தாமதத்திற்கு நான் காரணம் என்றாலும், இம்முறை அந்தப் பழி என்மீதில்லை என்ற வரைக்கும் சந்தோஷமே.

இரத்தப் படலம் - லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் - தினகரன் வெள்ளி மலர் சிறப்பு கட்டுரை:  சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை மதியம் நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் சந்தாதாரர் தோழர் சிவராமன் அவர்கள் எனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். வழமை போல அப்போதும் ஒரு மீட்டிங்கில் இருந்து தொலைத்த நான், சிறிது நேரம் கழித்து அவரிடம் பேசினேன். இரத்தின சுருக்கமாக பேசும் அவர், இரத்தப்படலம் பற்றிய சில விவரங்களையும், லயன் காமிக்ஸ் அலுவலக தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டு, பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு நானும் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

இது நடந்து இரண்டு வாரம் கழித்து ஒரு புனித வெள்ளிகிழமை அன்று தினகரன் வெள்ளிமலரை படித்தால், பின்னட்டையில் இந்த அற்புதமான கட்டுரை (காமிக்ஸ் பற்றிய நியூஸ் வந்ததால் அந்த வெள்ளி, புனித வெள்ளியாக மாறியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?). அடுத்து நான் சொல்லப்போகும் வசனத்தை பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக வரும் இன்ஸ்பெக்டர் சஷிகுமார் போல படிக்கவும். சாதாரண ஒரு எடிட்டர் எழுதிய கட்டுரை அல்ல இது. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் காமிக்ஸ் வெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படிப்பட்ட கட்டுரையை எழுத முடியும்.

இந்த கட்டுரை வெளியான அன்று அடியேன் இந்தியத் தலைநகரில் இருந்ததாலும், அங்கு ஸ்கான் வசதிகள் சரிப்படாததாலும் உடனடியாக பதிவிட முடியவில்லை. ஈரோட்டின் காமிக்ஸ் குபேரர் ஸ்டாலின் அவர்கள் இந்த பதிவில் இதைப்பற்றி இட்ட பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

 

Dinakaran Tamil Daily Friday Supplement Velli Malar Book Dated 10082012 Page No 24 Bourne Legacy Article by ComiRade K.N.Siva Raman
Dinakaran Tamil Daily Friday Supplement VelliMalar Book Dated 10082012 Page No 24 Bloune Legacy Article

ஒரு சோகமான பின்குறிப்பு: இந்த நியூஸ் வெளியான சிறிது நேரத்திலேயே (மதியம் பனிரெண்டு மணிக்குள்ளாக) சுமார் நாற்பது தொலைபேசி அழைப்புகள் லயன் ஜம்போ ஸ்பெஷல் இரத்தப்படலம் பற்றி விசாரித்து விற்பனைக்காக வர ஆரம்பித்து விட்டது. இது ஆரம்ப நிலை. ஆனால் சோகமான தகவல் என்னவெனில் ஏற்கனவே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன என்பதே. ஒரு தர்ம சங்கடமான நிலையை ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியமைக்கு இங்கே மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் தோழர் அவர்கள் என்ன விஷயத்திற்காக தகவல் சேகரித்தார் என்பது தெரியாத சூழலிலேயே நான் தகவல் தெரிவித்தேன். ஆகையால் .....

பெருங்களத்தூர் புத்தகக் கடை மீரா முருகன்: ஏற்கனவே திரு நூல் பாண்டியன் அவர்களின் புத்தகக் கடை பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இப்போது அடுத்த புத்தகக் கடைக்காரர். ஆனாலும் மிகவும் இனிய, பழகுவதற்கு எளிய, கூச்ச சுபாவம் கொண்ட மருகன் அவர்களிடம் காமிக்ஸ் எதுவும் இல்லையாம். பின்னே, தகவல் வந்து ஒரு மாதம் கழித்து போன் செய்தால் எப்படி இருக்கும்? என்று சொல்கிறார் நண்பர் இரவுக் கழுகு. ஆனால் அவரது Behind the screen story படிப்பதற்கு அருமையாக இருக்கிறது.

 

Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article by S.Kiruba Karan
Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article

குங்குமம் வரவேற்பறை:  விகடனை தொடர்ந்து குங்குமம் வார இதழிலும் இப்போது ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகம், ஒரு இணையதளம் என்று சிறப்பாக அறிமுகம் செய்கிறார்கள். சிறுவர்களுக்கான இரண்டு தகவல்கள் இருந்ததால் அந்த ஸ்கான்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

 

Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site F0r Children
Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site Fir Childrens

பழைய வின்டேஜ் காமிக்ஸ் விற்பனை: படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு தகவல். சத்தியமாக நம்மூரில் இல்லை. இனி தொடர்ந்து படிக்கவும். அட, எங்க சார் போறீங்க? ஓ, இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு என்று தானே? அதுவும் ஒரு வகையில் சரிதான். தகவலுக்காக இந்த ஸ்கான்.

 

Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article
Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article

ராப்பிட் ராப் - ஆங்கில ஃகிராபிக் நாவல்: ஃபாரூக்கி தம்பதியினரின் இந்த சித்திரக்கதை வடிவ நாவலை மிகவும் விரும்பி படித்தேன். பள்ளி / கல்லூரி நாட்களில் அனிமல் ஃபார்ம் என்கிற அட்டகாசமான கதையை நினைவூட்டினாலும், ஒரு சதாவீதம் கூட சார்ந்திராமல் ஒரு தனிப்பட்ட கதையாகவே இந்த நாவல் இருக்கிறது. சாவகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியநேரத்து வாசிப்புக்கு உகந்தது.

 

The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review by Swati
The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review

ரஸ்கின் பான்ட் - ஒரு ரசிக்கும்படியான பேட்டி: சிறுவயதில் வாண்டுமாமா அவர்களுடனே பயணம் செய்ததால் ரஸ்கின் பான்ட் அவர்களின் கதை சொல்லும் திறனை ரசிக்க முடியவில்லை (அவர் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார் என்பது வேறொரு கிளைக்கதை). பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா இனைந்து நடத்திய உங்கள் ஜூனியர் மாத நாவலில் வந்த உலக புத்தக அலமாரி என்கிற கதை தொடரில் ரஸ்கின் பான்டின் ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தை படித்து வியந்தேன். அதனைவிட அந்த கட்டுரையாசிரியர் அந்த சிறுகதையை நாம் ஏன் காதலிக்கவேண்டும் என்று விவரித்தவிதம் என்னை கவர்ந்தது. இதில் கொடுமை என்னவெனில் அந்த சிறுகதையை ஏற்கனவே நான்-டீடெயில் ஆக பள்ளியில் ஏற்கனவே படிதிருந்ததுதான். அதன் பின்னர் அவரது அனைத்து சிறுகதைகளையும் தேடிப்பிடித்து படித்து விட்டேன். வாசகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தமாத (ஆங்கில) கோகுலம் இதழில் இவரைப்பற்றிய ஒரு கவர் ஸ்டோரியும் வந்துள்ளது. இனி இவரது பேட்டி:

 

Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 07 Ruskin Bond Interview Part 02

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

20 comments:

  1. வெல்கம் பேக்.

    தொடர்ந்து பதிவிட்டு கலக்குங்கள். அதே சமயம் தங்கள் உடல் நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ராஜேஷ். கே

    ReplyDelete
  2. // இந்த நியூஸ் வெளியான சிறிது நேரத்திலேயே (மதியம் பனிரெண்டு மணிக்குள்ளாக) சுமார் நாற்பது தொலைபேசி அழைப்புகள் லயன் ஜம்போ ஸ்பெஷல் இரத்தப்படலம் பற்றி விசாரித்து விற்பனைக்காக வர ஆரம்பித்து விட்டது. இது ஆரம்ப நிலை. ஆனால் சோகமான தகவல் என்னவெனில் ஏற்கனவே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன என்பதே. ஒரு தர்ம சங்கடமான நிலையை ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியமைக்கு இங்கே மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் தோழர் அவர்கள் என்ன விஷயத்திற்காக தகவல் சேகரித்தார் என்பது தெரியாத சூழலிலேயே நான் தகவல் தெரிவித்தேன். ஆகையால் .....//

    தவறே இல்லை நண்பரே,இதன் மூலம் நமது இரத்தபடலத்திர்க்கு டிமாண்ட் ஏற்படுத்தியதுடன்,அவர்களுக்கு நமது காமிக்ஸ் வருவது கூட தெரிந்திருக்கலாம் ,இதன் மூலம் மறு பதிப்பு குரல்கள் ஒலித்தால் நாம் எப்படியேனும் அதனை வண்ணத்தில் கேட்டு பெற்றிட வேண்டும்....................நமது நண்பர்களும் குரல் கொடுக்க ஆர்வமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்,உடல் நலம் தேறி விட்டதா நண்பரே ..............

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.

      எடிட்டர் கண்டிப்பாக இந்நேரம் யோசிக்க ஆரம்பித்திருப்பார்.

      Delete
    2. //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா
      தவறே இல்லை நண்பரே,இதன் மூலம் நமது இரத்தபடலத்திர்க்கு டிமாண்ட் ஏற்படுத்தியதுடன்,அவர்களுக்கு நமது காமிக்ஸ் வருவது கூட தெரிந்திருக்கலாம் ,இதன் மூலம் மறு பதிப்பு குரல்கள் ஒலித்தால் நாம் எப்படியேனும் அதனை வண்ணத்தில் கேட்டு பெற்றிட வேண்டும்....................நமது நண்பர்களும் குரல் கொடுக்க ஆர்வமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்,உடல் நலம் தேறி விட்டதா நண்பரே//

      சப்ளை இல்லாத பொருளுக்கு உருவாக்கப்படும் டிமாண்ட் அந்த கம்பெனிக்குதான் கெடுதல் என்பது யுனிவர்சல் வர்த்தக விதி. டிமாண்ட் வந்து அது நெகடிவ் ஆக மாறிவிடக்கூடாது என்பதுதான் ஏன் ஆதங்கம்.

      உடல் நலம் இப்போது தேறி வருகிறது. நன்றி நண்பரே.

      Delete
  3. ரத்தப் படலம் மற்றும் பழைய புத்தகக் கடை நடத்துபவர் பற்றி படிப்பதற்கு நன்றாக இருந்தது.

    ரத்தப்படலம் முழு கலரில் வெளியிட எடிட்டரைக் கேட்போம் :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். அதற்க்கான கிரெடிட் நண்பர் சிவராமன் அவர்களையும், நண்பர் கிருபாகரனுக்குமே.

      ரீப்ரின்ட் பற்றி ஆசிரியரை கேட்பதில் தவறே இல்லை.

      Thanks for the comments.

      Delete
  4. பகிர்வுக்கு நன்றி... தொடர
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  5. //அந்த சிறுகதையை ஏற்கனவே நான்-டீடெயில் ஆக பள்ளியில் ஏற்கனவே படிதிருந்ததுதான். அதன் பின்னர் அவரது அனைத்து சிறுகதைகளையும் தேடிப்பிடித்து படித்து விட்டேன்.//

    தி கேர்ள் (ஜன்னலரோம் ஒரு பெண்) என்கிற கதைதானே அது?

    அந்த கதையை ரஸ்கின் பான்ட் தன்னுடைய புனைப்பெயரில் (சாகி) எழுதி இருப்பார்.

    இவருடைய சிறுகதை தொகுப்பு (தி தீஃப்) அட்டகாசமான ஒன்று. படியுங்கள் (படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்).

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். சாகி என்கிற புனைபெயரிலேயே அந்த கதையை எழுதி இருந்தார்.

      பதினொன்றாம் வகுப்பில் வந்ததாக நினைவு. இப்போது துபாயில் இருக்கும் பெஞ்சமின் சார்தான் அதனை அற்புதமாக விளக்கினார். அதில் ரொமான்ஸ் என்கிற வார்த்தைக்கு அதுவரை பாலியல் ரீதியிலான காதல் என்ற அர்த்தத்தை மட்டுமே உணர்ந்திருந்த பலரின் கண்களையும் திறந்தார். ஒரு சிறு பெண் எப்படி தன்னுடைய வார்த்தைகளால் சரி, இதற்க்கு மேல் சொல்ல வேண்டாம். ஸ்பாய்லர் ஆகி விடும்.

      The Thief was gifted (again) by My Brother as a Birthday gift, this year. Awesome read.

      Delete
  6. இந்தாங்க,

    இதான் ஃ கிராபிக் நாவலாம்.

    http://www.thehindu.com/news/cities/Delhi/article3561962.ece

    http://www.thehindu.com/life-and-style/metroplus/article3565734.ece

    அமர் சித்திரக் கதையை போய் இப்படி......

    ReplyDelete
    Replies
    1. தோழர்,

      விஷயம் தெரிந்துதான் இந்த கமென்ட் போட்டீர்களா? அந்த அமர் சித்திரக்கதை உண்மையில் விஷால் பரத்வாஜ் படமாக எடுத்ததன் விளைவே.

      இதே ஆகஸ்ட் மாதம் ஐந்து வருடங்களுக்கு முன்பாக யூ டிவி (எஸ்,அவங்களேதான்) விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வந்த ஒரு அற்புதமான படம் அது. கண்டிப்பாக பாருங்கள். அல்லது என்னிடம் வந்து டிவிடி வாங்கி சென்று பாருங்கள்.

      படத்தில் ஸ்ரேயா ஷர்மா (அட, நம்ம ஷ்ரியா ஆன்ட்டி இல்லீங்க) என்று ஒரு சிறுமி அட்டகாசமாக நடித்திருப்பாள். ஒன்றரை மணி நேர கவிதை.

      Delete
  7. நலமுடன் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே.
    பகிர்வும் அருமையாக உள்ளது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      உங்களது பதிவு அதிரடிகளையும் தொடருங்கள்.

      Delete
  8. நண்பரே

    தாங்களும் நலமுடன், பதிவுகளை போட்டு தாக்குவதை பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

    முடிந்த அளவு அதிக அலைச்சல், அதிக பணிச்சுமை, அதிக பயணம் போன்றவற்றை தவிர்த்து, உடல் நலனையும் பார்த்து கொள்ளுங்கள் :)

    இன்று காலையில் நாளிதழை பார்த்தபொழுது, நமது முகமூடி படத்திற்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய நேர்ந்த்தது (வேறு ஒரு பெண்மணி முகத்திரை என்ற பெயரை பதிவு செய்து உள்ளாராம். முகமூடி என்ற பெயர் அவர் பதிவு செய்த பெயரை பிரதிபளிக்கிரதாம்.)

    இவ்வளவு நாள் சும்மா இருந்து விட்டு, படம் வெளி வரும் நேரம் இப்படி செய்வது ஏனோ ?

    தடைகளை தாண்டி 'முகமூடி' மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!

    திருப்பூர் ப்ளுபெர்ரி.

    ReplyDelete
  9. என்னமா யோசிக்கிறாங்க... - முகமூடி படத் தலைப்புக்கும் வேணுமாம் தடை!!

    சென்னை: ஏதாவது ஒரு சொத்தைக் காரணம் இருந்தாலும், அதை முகாந்திரமாக வைத்து ரீலீஸ் நேரத்தில் ஒரு படத்தை முடக்க முடியுமா.. அதில் ஏதாவது பப்ளிசிட்டி கிடைக்குமா என்று ஆராய்வதில் டாக்டரேட் பட்டமே கொடுக்க வேண்டும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு.

    சிறிய தயாரிப்பாளர் என்பது இவர்களுக்கு ஒரு ஆயுதம். அப்படி ஒரு ஆயுதத்துடன், நாளை மறுநாள் வெளியாக உள்ள மிஷ்கினின் முகமூடி படத்துக்கு தடை கேட்டு சிலர் களமிறங்கியுள்ளனர்.
    சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் எம்.சசிகலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நான் அர்த்தநாரீஸ்வரர் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர். முகத்திரை என்ற தலைப்பில் சினிமா தயாரிக்கும்படி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்து, அதை சட்டப்படி 27.8.11 அன்று பதிவு செய்தோம்.

    பல லட்சம் ரூபாய் செலவில் தயாராகும் இந்த படத்தை ஆர்.எஸ்.கணேஷ் இயக்குகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பத்திரிகை மற்றும் டி.வி.களில் வந்த விளம்பரத்தில், முகமூடி என்ற பெயரில் யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சினிமாப்படம் 31-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    முகத்திரை என்ற பெயரை நாங்கள் பதிவு செய்த பிறகு அந்த பெயரை பிரதிபலிக்கும் வேறு பெயர்களை பதிவு செய்யக்கூடாது. ஆனால் முகத்திரை என்ற தலைப்பை ஒட்டிவரும் முகமூடி என்ற தலைப்பை பதிவு செய்துள்ளனர்.
    முகமூடி என்ற பெயரில் சினிமா வெளியே வந்தால், மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதோடு, எங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே முகமூடி என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த 17-வது சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி, தென்னிந்திய தமிழ் சினிமா தயாரிப்பாளர் கில்டு, தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

    பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ கதை முகமூடி. மிஷ்கின் இயக்க, யுடிவி தயாரிப்பில் ஜீவா, நரேன், பூஜா, கிரீஷ் கர்னாட் நடித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.

    Source : http://tamil.oneindia.in/movies/news/2012/08/small-producer-seeks-ban-mugamoodi-160501.html

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      விசாரிப்புகளுக்கு நன்றி. உடல் நலன் தேறிவிட்டது. இருந்தாலும் பயணங்கள் தவிர்க்க இயலாதது. இதோ, அடுத்த வாரம் மும்பைக்கு செல்ல வேண்டிய நிலை. வேறு வழி இல்லை. சென்றே ஆகவேண்டும். இதில் கொடோய் என்னவெனில் இதனால் பெங்களூரு காமிக் கான் எக்ஸ்ப்ரெஸ் வருகை இயலாமல் போவதே.

      படத்தில் என்னுடைய பங்களிப்பு சில Brand Incorporation மட்டுமே.

      Delete
  10. தமிழ் காமிக்ஸ்களுக்கு என்றே எக்ஸ்குளுசிவ் பாரம். இப்போது பீட்டா வில்

    http://tamilcomicsjunction.forumotion.in

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.